B.Ed., M.Ed படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வு – ஜூன் 28ல் தொடக்கம்!
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பி.எட், எம்.எட் படிப்புகளுக்கான தேர்வுகள் வருகிற ஜூன் 28ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
ஆன்லைன் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நடப்பாண்டான 2021ல் இரண்டாவது அலையாக உருவெடுத்து மக்களை மிக அதிக அளவில் பாதித்து வருகிறது. இதன் காரணமாக 2020-21ம் கல்வி ஆண்டில் கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான பி.எட், எம்.எட் தேர்வுகள் குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப் (Whats App) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – Messages Disappearing செய்வது எப்படி?
அதன்படி பி.எட், எம்.எட் படிப்புக்கான ஜூன், ஜூலை தேர்வு வருகிற 28ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.கோவிந்தன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்ததாவது, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டு மாணவர்களுக்கான பி.எட், எம்.எட் படிப்பு ஜூன், ஜூலை தேர்வு வருகிற ஜூன் 28ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும். ஜூன் 28ம் தேதி தொடங்கும் இந்த தேர்வுகள் வருகிற ஜூலை 5ம் தேதி முடிவுக்கு வரவுள்ளது. மேலும் தேர்வு அட்டவணை மற்றும் அதற்கான முழு விவரங்கள் குறித்த தகவல்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அதில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.