இந்தியாவில் மீண்டும் 4 ஆம் அலை துவக்கம் – எச்சரிக்கும் அரசு மருத்துவர்கள்! அச்சத்தில் மக்கள்!
இந்தியாவில் மீண்டும் கொரோனா 4 ஆம் அலை துவங்கி விட்டது. மேலும் அனைத்து மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் முக்கிய அறிவிப்பை தெரிவித்து உள்ளார்.
மீண்டும் கொரோனா:
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை மக்கள் சந்தித்து வந்தனர். மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருக்கும், இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் இருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், அலை கணக்கிடப்படுவதே ஒரு வார தொற்று பாதிப்பை வைத்துதான். ஒருநாள் நோய்த்தொற்று பாதிப்பை வைத்து நம்மால் எதையும் கூற முடியாது. ஏழு நாட்கள் கிடைத்த நோய்த்தொற்று எண்ணிக்கையை வைத்து, அதில் எண்ணிக்கை கணிசமாக உயரும் போது நோய்த்தொற்று அலை ஏற்பட்டதாகக் கருதப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் மே 5ம் தேதி உணவகங்களுக்கு விடுமுறை – ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!
அதனை தொடர்ந்து, கொரோனா தொற்றை பொறுத்தவரையில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் இந்தியா முழுவதுமே தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது. இவ்வாறு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவில் 4ஆம் அலை தொடங்கி விட்டது என்றே கூறலாம். மேலும் சீனா போன்ற நாடுகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளுக்கு பிறகு கூட நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது என்றும் கூறியிருந்தார்.