தமிழகத்தில் மே 5ம் தேதி உணவகங்களுக்கு விடுமுறை – ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் வருகிற மே 5ம் தேதி அன்று வணிகர் தினமாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் அன்றைய தினம் பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மே 5ம் தேதி அன்று காலை வேளையில் மட்டும் உணவகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வணிகர் தினம்:
தமிழகத்தில் வருகிற மே 5ம் தேதி அன்று வணிகர் தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக திருச்சியில் வருகிற மே 5ம் தேதி அன்று வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பாக மாநாடு நடைபெற உள்ளது. அத்துடன் இந்த வணிகா் விடியல் மாநாட்டில் தமிழக முதல்வர் சிறப்பு உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அனைத்து வணிக கடைகளை சார்ந்த வணிகர்களும் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் இம்மாநாட்டில் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவை அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதனால் இந்த மாநாட்டில் வணிகர்கள் கலந்து கொள்ள ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான கடைகளும் பங்கு பெறும் வகையில் வருகிற மே 5ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை அனைத்து கடைகள், பெருநிறுவனங்கள், தொழிற்கூடங்கள், உணவகங்கள், மருந்தகங்கள், மால்கள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்றைய தினத்தன்று சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களுக்கு காலை வேளையில் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று ஓட்டல்கள் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐலா பாப்பா மற்றும் அர்ஷ் – வைரலாகும் வீடியோ!
மேலும் இந்த அறிவிப்பில், சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கூறியதாவது, மே 5ம் தேதி அன்று வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக அன்றைய தினம் உணவகங்களுக்கு விடுமுறை அளித்திட கோரிக்கை வைத்தார். அதன்படி மே 5ம் தேதி அன்று சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் காலை வேளையில் மட்டும் விடுமுறை அளிக்க அனைத்து வணிகர்களும் முடிவு செய்துள்ளனர்.