தமிழகத்தில் விதவைகளுக்கு ஓய்வூதியத்தொகை ரூ.800 ஆக உயர்வு – பயனாளிகள் மகிழ்ச்சி!
சமூக நல பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் விதவை பெண்கள், பாலின சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் நடப்பாண்டு முதல் 800 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்:
தமிழகத்தில் அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக 60 வயது மேற்பட்டோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை பெண்கள் போன்றோர்களுக்கு அரசு சார்பாக மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்த ஓய்வூதிய தொகை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நிலவிய பொருளாதார நெருக்கடியால் விலைவாசி அதிகரித்துள்ளது.
ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – IRCTC BOB கார்டு அறிமுகம்!
இந்த நேரத்தில் சமூக நல பாதுகாப்பு அமைச்சகம் ஓய்வூதியத் தொகையை உயர்த்தியுள்ளது. சமூக நல பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ்,திருமணமாகாத பெண்கள், விதவை பெண்கள், பாலின சிறுபான்மையினருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 59.45 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஓய்வூதியமானது பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு 600 ரூபாயில் இருந்து 800 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முக்கிய விதிமுறைகள் அறிவிப்பு!
மேலும் வருவாய் ஆவணங்கள், வீட்டு வாசலுக்கு திட்டத்தின் கீழ், வருமான, ஜாதி சான்றிதழ்களை விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று இலவசமாக வழங்கப்படும். ஆசிட்’ தாக்குதலுக்கு ஆளாகும் மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம், 3,000 திலிருந்து 10,000 ஆக ரூபாயாக உயர்த்தப்படும். விவசாய நிலம் உட்பட மற்ற நிலங்களை ‘சர்வே’ நடத்த 287 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மூன்று ஆண்டுகளில் டிஜிட்டல் முறையில் வரைபடம் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.