சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிரியங்காவை விலக்கிய விஜய் டிவி – ரசிகர்கள் ஷாக்!
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து பிரியங்கா திடீரென வெளியேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக மைனா நந்தினி தொகுத்து வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் சிங்கர்:
விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வந்தார். இவர் தனது சாதாரணமான காமெடி பேச்சால் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருக்கிறார். இதன் மூலமாகவே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசையும் தட்டி சென்றார். எப்போதும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா தான் தொகுத்து வழங்குவார்.
இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சமயம் பார்த்து சூப்பர் சிங்கர் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்டது. இவருக்கு பதிலாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்த்த சமயத்தில் மைனா நந்தினி தொகுத்து வழங்க முன்வந்தார். சில வாரங்கள் நந்தினி மா.கா.பாவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரியங்கா வெளியேறியவுடன் மறுபடியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!
நிகழ்ச்சியும் சிறப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில் பிரியங்காவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விஜய் டிவி விலக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென ஏன் பிரியங்காவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலக்க வேண்டும் என மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்காவிற்கு பதிலாக இனி மைனா நந்தினி தான் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது
Good decision from vijay TV.
She is cunning ….