ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முக்கிய விதிமுறைகள் அறிவிப்பு!
இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக சமீப காலமாக புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரயில் பயணங்களின் போது, பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
முக்கிய விதிமுறைகள்:
இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் பலவித தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கும் மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது ரயில் பயணங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
PF சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய அப்டேட் குறித்த முழு விபரம்!
இந்த நிலையில் ரயில் பயணங்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்யும் போது, நாம் எதிர்பார்க்கும் சீட் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு தான். இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த் (படுக்கை) தொடர்பாக சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் கிடைத்த பயணிகள், பெரும்பாலும் கீழ் பெர்த் கிடைத்த பயணிகள் தூங்கினால் தான் மிடில் பெர்த்தை ஓப்பன் செய்து அதில் படுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
1.ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட விதிமுறையில், மிடில் பெர்த் உள்ள பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அந்த பெர்த்தில் தூங்க முடியும். மேலும் அந்த நேரத்தை தாண்டி தூங்கினால் அதைத் தடுக்கலாம். அதுதான் விதிமுறை ஆகும்
2.அதேபோல, காலை 6 மணிக்குப் பிறகு, மற்ற பயணிகள் கீழ் பெர்த்தில் அமரக்கூடிய வகையில் மிடில் பெர்த்தை மடக்க வேண்டும். அதேபோல், இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் தூங்கிய பிறகு யாரும் தொந்தரவு செய்யக் கூடாது.
3.TTR கூட டிக்கெட் பரிசோதனைக்காக அந்த நேரத்தில் தொந்தரவு செய்ய முடியாது. ஆனால், இரவு 10 மணிக்கு மேல் பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கு இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.