‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் எனக்கு நண்பனாக கிடைத்தது என்னுடைய அதிஷ்டம் – புகழ்ந்து பேசிய தீபிகா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு தீபிகா விலகிய பிறகும் கூட கண்ணனுடன் தொடர்பிலே இருந்து வருகிறார். தற்போது ஒரு பேட்டியின் போது தீபிகா, கண்ணனை குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முலமாக அறிமுகமானவர் தான் தீபிகா. இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பாகவே தீபிகாவுக்கு பதிலாக சாய் காயத்ரி நடிக்க வந்தார். ஆனால் ரசிகர்களுக்கு கண்ணனுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா மட்டும் தான் சரியாக வரும் என பலரும் தீபிகாவையே நடிக்க வைக்குமாறு கேட்டு கொண்டனர். சீரியலில் நடிக்கும் போது கண்ணனும் ஐஸ்வர்யாவும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
PF சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய அப்டேட் குறித்த முழு விபரம்!
அவ்வப்போது இருவரும் ஒன்றாக இணைந்து ரீலிஸ் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். நாளடைவில் கண்ணன் – ஐஸ்வர்யா என்றே இவர்களது பெயர் மக்களின் மனதில் பதிந்துவிட்டது. சீரியலை விட்டு சென்ற பிறகும் கூட தீபிகா கண்ணனுடன் பழகி வருகிறார். தற்போது ஒரு பேட்டியின் போது தீபிகா கண்ணனை பற்றி கூறியுள்ளார். அதாவது நானும் கண்ணனும் சில காலங்கள் தான் பழகியிருக்கிறோம், ஆனால் கண்ணனை போல ஒரு நல்ல நண்பனை பார்க்கவே முடியாது.
இது வரைக்கும் கண்ணன் என்னை ஒரு இடத்தில கூட விட்டு கொடுத்தது இல்லை என கண்ணனை குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இது மட்டுமல்லாமல் எனது பெயர் ஐஷு என்றே ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக வரும் பணத்தை கொண்டு மட்டுமே எனது வாழ்க்கை ஓடி கொண்டிருக்கிறது என்றும், இரண்டு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அந்த கதாபாத்திரம் எனக்கு பொருந்தாததால் அதனை தவிர்த்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.