தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரத்து – அமைச்சரின் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. ஆனால் அண்டை நாடுகளிலும் மற்றும் அண்டை மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ தொற்று வேகமாக பரவி வருகிறது. எக்ஸ்இ வைரஸ் ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பு என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் இது போன்ற திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – கடன் வட்டி & EMI உயர்வு? RBI முக்கிய முடிவு!
ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்இ வைரஸ் ஓமைக்ரான் வைரசை விட 10% வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கும். இது அதிவேமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் பொது இடங்களில் வருபவர்கள் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!
மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த விதிமுறையை அரசு திரும்ப பெற்றுள்ளது. மேலும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். அத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த கொள்ள அவர்களே விருப்பத்துடன் வந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கும் அபராதம் வசூல் செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.