தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

0
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு திருப்புதல் தேர்விற்கான கேள்வித்தாள் இணையதளத்தில் கசிந்தது. இதனையடுத்து வழக்கம் போல தேர்வு நடைபெறும் எனவும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கேள்வித்தாள் கசிவு:

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. அதே போல இரண்டு ஆண்டுகளுமே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதற்கு முன்னால் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இந்தாண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கண்டிப்பாக இந்தாண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? அவரே சொன்ன விளக்கம்!

அதே போல 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. மாணவர்கள் எந்த சிரமமும் இன்றி பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது கேள்வித்தாள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கேள்வித்தாள் வெளியாக காரணமாக இருந்த பள்ளி மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – IRCTC புதிய வசதி!

இந்நிலையில் இரண்டாம் திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான தேர்வுகள் மற்றும் கணினி அறிவியல், சிறப்பு தமிழ், புள்ளியியல் தேர்வுகளும், வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் எந்த குழப்பமும் இல்லாமல் முடிவடைந்துவிட்டது. இதனை தொடர்ந்து கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் ஆகிய தேர்வு இன்று நடைபெற இருந்தது. ஆனால் தேர்வுக்காக தயாரிக்கப்பட்ட 4 கேள்வித்தாளில் இருந்து ஒரு கேள்வித்தாள் கசிந்தது. இது மாணவர்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்வு நடக்குமா நடக்காதா எனவும் கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் மீதமுள்ள கேள்வித்தாள்களை வைத்து தேர்வு வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திருப்புதல் தேர்வு மதிப்பெண்ணை எக்காரணம் கொண்டும் பொதுத்தேர்வு மதிப்பெண்ணுடன் இணைக்கப்பட மாட்டாது. இதனால் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!