‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவின் வாழ்கை பயணம் – தொகுப்பாளினி முதல் நடிகை வரை!
தற்போது பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதிக அளவிலான காட்சிகளில் வரும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபிகா அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பயணத்தை இந்த பதிவில் காண்போம்.
விஜே தீபிகா:
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் கண்ணன், ஐஸ்வர்யா காதல் காட்சிகளின் மூலம் அதிக பேசப்பட்டவர் ஐஸ்வர்யா கதாபத்திரத்தில் நடிக்கும் விஜே தீபிகா. இந்த சீரியலில் இவர் தற்போது சில மாதங்களாக மட்டுமே தோன்றுகின்றார். ஆனாலும், சில காலத்திலேயே அதிகம் கவனிக்கப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது. இவர், முதலில் தனது வாழ்க்கையை நேரடியாக சீரியல் நடிகையாக தொடங்கியவர் இல்லை.
மாலை 6 மணிவரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
விஜே தீபிகா திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். சிறு வயது முதல் நிகழ்ச்சி தொகுப்பாளராக விரும்பியுள்ளார். முன்னதாக, திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ படித்துள்ளார். கல்லூரியில் படித்துக்கொண்டே பல சேனல்களில் ஆங்கரிங் சான்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். முதலில் இவருக்கு மூன் டிவியில் தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்தது. பல நேரடி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். பின்னர், கலைஞர் டிவியில் தொகுப்பாளராகவும், சன் டிவியின் சந்திரகுமாரி சீரியலிலும் வாய்ப்புகள் கிடைத்தது.
TN Job “FB Group” Join Now
இந்த வாய்ப்புகளின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் ஆனந்தியின் தோழியாக நடித்திருந்தார். இவர் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாய்ப்பிற்காக இரண்டு முறை ஆடிஷன் அட்டன் பண்ணியுள்ளார். இறுதியாக ஐஸ்வர்யா கதாபாத்திரம் கிடைத்தது. இந்த சீரியல் மூலம் விஜே தீபிகா அதிகம் பாராட்டுகளையும், ரசிகர்களையும் பெற்றுள்ளார். யூடியூப் சேனல், ஃபோட்டோஷூட் என்று எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆர்வமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.