கயலை கண்டுகொள்ளாததால் தனத்தை எதிர்க்கும் மீனா, உதவி கேட்கும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
கூட்டு குடும்ப கதையை மிகவும் எதார்தமாகவும் அதே சமயம் சுவாரசியமாகவும் எடுத்துக்காட்டுகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது மீனா கயலை பற்றி நினைத்து மிகவும் வருந்துகிறார். அனைவருமே தனதின் குழந்தையை வாரிசாக கருதுகிறார்கள் என்றும் மிகவும் வருத்தம் அடைகிறார். இது இப்படியாக இருக்க இனி வரும் நாட்களில் மீனா பரம்பரை தொட்டிலை தனது குழந்தைக்கு மட்டுமே பயன்படுத்தி உள்ளதாகவும் தனதின் குழந்தைக்கு பயன்படுத்தவில்லை என்று கவலை அடைவார் என்றும் கூறப்படுகிறது.
கூடுதலாக தனம் தனது குழந்தைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவும் கயலை முன்பு போல கவனித்து கொள்ளவில்லை என்றும் அனைவரிடமும் கூறி சண்டை போடுகிறார். இதனால் குடும்பத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இது மட்டுமின்றி கண்ணன் தனத்தின் குழந்தையை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனை ஐஸ்வர்யாவிடம் தெரிவித்து எப்படியாவது தனதின் குழந்தையை கையில் தூக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல்? ரசிகர்கள் ஷாக்!
தற்போது அனைவரிடமும் கொஞ்சம் கொஞ்சமாக பேசி வரும் கண்ணன் தனது அண்ணி மீனாவிடம் இது பற்றி கேட்கிறார். இதற்கு மீனா என்ன செய்வார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது போன்ற காட்சிகள் வருவதால் இனி வரும் நாட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.