விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் தொலைக்காட்சியில் பலவித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு இருக்கிறது. அந்த வகையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முத்தரசு கொலை வழக்கு குறித்த எபிசோட் மிகவும் முன்னணியாக ஒளிபரப்பாகியது. அதனை தொடர்ந்து மாயனின் தம்பியான மாறன் இந்தியாவிற்கு வந்து அனைவரிடமும் சண்டை போட்டார்.
கோபியை ராதிகாவுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அப்பா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!
தொடர்ச்சியாக அதே போன்ற கதைக்களத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இதன் காரணமாக சிஆர்பி சரியத் தொடங்கியது. பல திருப்பங்கள் சீரியலில் இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து அதே நிலையிலேயே இருந்து வந்தது. இது ஒரு பக்கம் இருக்க இந்த சீரியலின் கதாநாயகி ரக்ஷிதா சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியது. இது குறித்து ரக்ஷிதா எதுவும் கூறவில்லை என்று சொன்னாலும் மறுப்பு ஏதும் அவர் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் விலகுவது உறுதியாகியது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை? அடுத்த எபிசோட் ட்விஸ்ட்!
கடந்த சில வாரங்களாக இந்த சீரியலின் டிஆர்பி தொடர்ந்து சரிந்து வருவதால் இந்த சீரியல் முடிய இருக்கிறது என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீரியலுக்கு பதிலாக தற்போது விஜய் தொலைக்காட்சியில் இதே நேரத்தில் வேறொரு சீரியல் ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது. அந்த சீரியல் தான் முத்தழகு. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் விஜய் டிவி நிர்வாகம் அடுத்து என்ன செய்ய இருக்கிறது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்