நவ.1 முதல் 1 – 7 மற்றும் 10 & 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள்!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் நவம்பர் 1ம் தேதி (நாளை) முதல் 1 – 7 வகுப்புகள் மற்றும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா 2வது அலை சற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதில் அடுத்தகட்டமாக மாணவர்களின் நலன் கருதி கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி ஏற்கனவே தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் நவம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்க அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி நாளை முதல் 1 – 7 மற்றும் 10 & 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் திங்கட்கிழமை (நவ.1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும். கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்பட்டால் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு பெஞ்சில் 2 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தினசரி சுழற்சி முறையில் அரைநேர வகுப்புகள் மட்டுமே நடைபெறும். முதல் ஒரு வாரத்திற்கு வருகைப் பதிவேடு எடுக்கப்படாது. மாணவர்களுக்கு கல்வியில் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி!!
பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க 24,300 தெர்மல் ஸ்கேனர் கருவிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் உரிய நேரங்களில் சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.