விபத்தில் சிக்கும் ராமமூர்த்தி, கோபி & ராதிகா பற்றி பாக்கியாவிடம் சொல்வாரா? சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பாக்யலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் பலவித திருப்பங்களுடன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது பாக்யலட்சுமி சீரியல். இந்த சீரியலில் இல்லத்தரசியாக இருக்கும் ஒரு பெண் எது போன்ற பிரச்சினைகளை சந்தித்து தனது கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்கிறார் என்பதனை மிகவும் அழகாக எடுத்துக் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சீரியலின் முக்கிய கட்டமாக கோபி தனது அப்பா ராமமூர்த்தி இடம் மாட்டிக்கொள்கிறார்.
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல்? ரசிகர்கள் ஷாக்!
இத்தனை நாட்களாக ராதிகாவை சந்திக்காமல் கோபி தவிர்த்ததற்கான காரணத்தை ராமமூர்த்தி இதன் மூலமாக தெரிந்து கொள்கிறார். அமைதியாக இல்லாமல் அவர் கோபியை தனியாக அழைத்து நன்றாக திட்டியும் விடுகிறார். இதனை தொடர விடக்கூடாது என்பதிலும் அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். அதற்கு முதல் கட்டமாக ராதிகா வீட்டிற்கு சென்று உணவினை வழங்குகிறார். பின்னர் இந்த முறை கண்டிப்பாக தனது வீட்டிற்கு வர வேண்டுமென்றும் அப்போது தனது மகன் கோபியை அறிமுகம் செய்து வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்து விடுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை? அடுத்த எபிசோட் ட்விஸ்ட்!
இது பற்றி கோபிக்கு தெரியாது. தற்போது ராதிகா வீட்டிற்கு வந்து கோபியை பற்றி தெரிந்து கொண்டால் அடுத்த சீரியலில் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செய்தது போலவே ராமமூர்த்திக்கு விபத்து ஏற்பட்டு அடிபட்டு விடுவது போல் காட்டி விடுவார்களோ என்பது போன்ற சந்தேகங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு மறதி வியாதி வருவது போல் கூட காட்டலாம் என்றும் செய்திகள் வெளி வருகிறது. ராதிகாவிற்கு கோபி பற்றிய உண்மை தெரிந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.