மூர்த்தி ஆப்ரேஷனிற்கு பணம் கட்ட சொன்ன டாக்டர், வருத்தத்தில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்திருப்பதால் உடனே ஆஞ்சியோ செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். மறுபக்கம் முல்லை வீட்டை விட்டு வெளியே வந்ததை இன்னும் நம்ப முடியாமல் இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு என்ன சொல்ல போகிறார்கள் என தெரியாமல் கண்ணனும் ஜீவாவும் தனமும் வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது நர்ஸ் ஒருவர் வந்து அவருக்கு ஹார்ட்அட்டாக் என சொல்கிறார். தனம் அதை கேட்டு பதட்டமடைய டாக்டர் வந்து விவரத்தை சொல்வார் என சொல்கிறார். பின் டாக்டர் வந்து மூர்த்தியின் குடும்பம் நீங்களா என கேட்கிறார். தனம் ஆமாம் என சொல்ல அப்போது நர்ஸ் எதோ ஹார்ட்அட்டாக் என சொன்னார் அப்படி எல்லாம் இல்லை தான என தனம் கேட்கிறார்.
TN Job “FB Group” Join Now
அப்போது டாக்டர் அவர்கள் சொன்னது உண்மை தான் என சொல்கிறார். அவருக்கு உடனே ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மறுபக்கம் கதிர் மூர்த்தி பேசியதை பற்றி நினைத்து பார்க்கிறார். இந்த வீட்டை விட்டு வெளியே சென்றால் நாங்க யாரும் உன்னுடன் பேச மாட்டோம் என சொன்னதை நினைத்து பார்த்து கண் கலங்குகிறார். அப்போது முல்லையின் அப்பா வருகிறார். அவர் கவலைப்படாமல் இருங்க மாப்பிள்ளை உங்களின் எல்லா முயற்சிகளிலும் நான் இருப்பேன் என சொல்கிறார்.
எனக்கு நீங்க ஜெயிப்பீர்கள் என நம்பிக்கை இருக்கிறது. நீங்க ஜெயிக்கும் வரை நான் சாகமாட்டேன் உங்களை முன்னேற்றி விட்ட பின் தான் என் உயிர் போகும் என வாக்கு கொடுக்கிறார். மறுபக்கம் டாக்டர் மூர்த்திக்கு டிரீட்மென்ட் பார்த்துவிட்டு தனம் ஜீவா கண்ணனை அழைக்கின்றனர். அவர்களிடம் மூர்த்திக்கு இதயத்தில் அடைப்பு இருக்கிறது. உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சொல்கின்றனர். கண்ணன் அழுது கொண்டே ஆப்ரேசன் எல்லாம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாத என கேட்கிறார்.
ரோஹித்தை வெறுக்கும் வெண்பா, வீட்டு விசேஷத்திற்கு பாரதி கண்ணம்மாவை அழைக்கும் ரோஹித் – இன்றைய எபிசோட்!
டாக்டர் கண்டிப்பாக ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சொல்ல உடனே அவர் பெயரில் 2 லட்சம் கட்ட வேண்டும் என சொல்கிறார். இன்னும் 1 மணி நேரத்தில் பணம் ஏற்பாடு செய்துவிடுவோம் என ஜீவா சொல்கிறார். பின் தனம் என்னென்னமோ சொல்கிறார்கள் இப்போ பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் உடைந்து போய் உட்காருகிறார். மறுபக்கம் முல்லை என்னென்னமோ பேசினார்கள் எல்லாம் எனக்கு வருத்தமாக தான் இருந்தது
ஆனால் இப்படி நாம வீட்டை விட்டு வெளியே வருவோம் என நான் நினைக்கவே இல்லை என சொல்கிறார். நான் கர்ப்பமாக இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது டாக்டர் எனக்கு வாய்ப்பு குறைவு என சொன்ன போதே நான் வேண்டாம் என இருந்திருக்க வேண்டும். அப்போது எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நான் நினைத்தேன் எல்லாம் என் தவறு தான் என சொல்ல, அப்போது கதிர் எல்லாதிருக்கும் உன் மீது பழி போடுவதை நிறுத்திவிடு என முல்லையை சொல்கிறார்.