ரோஹித்தை வெறுக்கும் வெண்பா, வீட்டு விசேஷத்திற்கு பாரதி கண்ணம்மாவை அழைக்கும் ரோஹித் – இன்றைய எபிசோட்!

0
ரோஹித்தை வெறுக்கும் வெண்பா, வீட்டு விசேஷத்திற்கு பாரதி கண்ணம்மாவை அழைக்கும் ரோஹித் - இன்றைய எபிசோட்!
ரோஹித்தை வெறுக்கும் வெண்பா, வீட்டு விசேஷத்திற்கு பாரதி கண்ணம்மாவை அழைக்கும் ரோஹித் - இன்றைய எபிசோட்!
ரோஹித்தை வெறுக்கும் வெண்பா, வீட்டு விசேஷத்திற்கு பாரதி கண்ணம்மாவை அழைக்கும் ரோஹித் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா பாரதிக்கு சாப்பாடு பரிமாறி ஹேமாவிடம் அன்பாக நடந்து கொள்ள சொல்கிறார். மறுபக்கம் வெண்பா ரோஹித்தை நினைத்து கடுப்பில் இருக்கிறார். ஆனால் ரோஹித் பாரதி கண்ணம்மாவை தன்னுடைய வீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா பாரதியிடம் ஹேமா பற்றி பேசிவிட்டு செல்ல பாரதி ஹேமா சரியாக படிக்கிறாளா சரியாக சாப்பிடுகிறாளா என தெரியவில்லையே என நினைத்து கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மா வந்து சாப்பாடு வைக்கிறார். பாரதி என்ன செய்கிறாய் என கேட்டுக் கொண்டே இருக்க ஆனால் கண்ணம்மா சாப்பாடு வைத்துக் கொண்டே இருக்கிறார். பின் பாரதியிடம் கண்ணம்மா அதான் சாப்பாடு வைக்கிறேன் சாப்பிடுங்க என சொல்ல நான் கேட்டேனா என பாரதி கேட்கிறார்

TN Job “FB  Group” Join Now

நீங்க சாப்பாடு கொண்டு வர சொல்லவில்லை. ஆனால் நீங்க கடைசியாக எப்போ சாப்பிட்டீங்க என கண்ணம்மா கேட்கிறார். முதலில் சாப்பாடு தான் முக்கியம் பின் தான் வேலை என நீங்க தான சொன்னீங்க என கண்ணம்மா சொல்கிறார். ஒரு அட்மின் ஆபிசர் என்ற உரிமையில் நான் உங்களை சாப்பிட சொல்கிறேன் என சொல்கிறார். ஹேமாவிற்கு நீங்க சாப்பிட்டீங்களா என கவலை என சொல்லி சாப்பிட சொல்கிறார். நான் உங்க குழந்தைக்காக தான் சொல்கிறேன் சாப்பிடுங்கள் என சொல்கிறார்.

பின் பாரதி சாப்பிட தொடங்குகிறார். மறுபக்கம் ரோஹித்தை நினைத்து வெண்பா கோவமாக இருக்கிறார். அப்போது சாந்தி வர ரோஹித் சார் உங்களுக்கு பிரச்சனை என்றதும் எப்படி வந்து உதவி செய்தார். என்னை கேட்டால் நீங்க அவரை திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என சொல்கிறார். வெண்பா அதை கேட்டு கோவப்பட நீங்க தான் பாரதி பாரதி என இருக்கீங்க அவர் உங்களுக்கு ஒன்று என்றால் வந்திருக்காரா ஆனால் ரோஹித் மாயாண்டி பிரச்சனையை எப்படி செய்தார். அப்பறம் உங்களை மாயாண்டி மிரட்டுவதாக அவருக்கு தெரியும் ஆனால் என்ன வீடியோ என கேட்க கூட இல்லை இப்படி ஒருத்தர் யாருக்கு கிடைப்பார் என சாந்தி கேட்க வெண்பா கோவத்தில் சாந்தியை விரட்டி விடுகிறார்.

நெஞ்சு வலியால் பரிதாபமாக உயிரிழக்கும் மூர்த்தி பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

மறுபக்கம் ரோஹித் பாரதியை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கே பாரதிக்கு அடையாளம் தெரியாமல் இருக்க அப்போது நான் வெண்பாவை திருமணம் செய்ய இருப்பவர் என அறிமுகம் செய்து கொள்கிறார். பின் சொல்லுங்கள் என்ன விஷயம் என கேட்க ஒரு முக்கியமான விஷயம் எனக்கும் வெண்பாவிற்கும் திருமணம் குறித்த ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அதற்கு உங்களை அழைக்கலாம் என தான் வந்தேன் என ரோஹித் சொல்கிறார். பாரதி வெண்பா என்னுடைய ரொம்ப நாள் ப்ரண்ட் அவருக்கு ஒரு நல்லது என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என சொல்கிறார்

பின் நீங்க வெண்பாவின் காதலர் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் வெண்பாவிற்கு என்ன ரொம்ப பிடிக்கும் என கேட்க பாரதி சில விஷயங்களை சொல்கிறார். பின் பாரதி நம்பர் வாங்கி கொண்டு ரோஹித் பத்திரிகை அனுப்புகிறார். பின் மருத்துவமனையில் இருப்பவர்களிடம் அட்மின் எங்கே என கேட்க அவர்கள் கண்ணம்மாவை அழைக்கின்றனர். கண்ணம்மாவிடம் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என ரோஹித் கேட்க என்ன வேண்டும் என்றாலும் செய்கிறேன் என கண்ணம்மா சொல்கிறார். ஏன் என ரோஹித் கேட்க உன்னை பார்த்தால் தம்பி போல இருப்பதாக கண்ணம்மா சொல்கிறார்.

ரோஹித் அதை கேட்டு மனம் உருகி விடுகிறார். பின் கண்ணம்மா என்ன உதவி என கேட்க நான் பாரதியின் மனைவி கண்ணம்மாவை பார்க்க வேண்டும் என சொல்கிறார். அவரிடம் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என சொல்ல நான் தான் என கண்ணம்மா சொல்கிறார். ரோஹித் அதை கேட்டு அதிர்ச்சி அடைய நீங்க இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்கிறீர்கள் ஆனால் விவாகரத்து வாங்க இருக்கீங்களா என கண்ணம்மா கேட்கிறார். ஆமாம் என கண்ணம்மா சொல்ல வெண்பாவுடன் நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்கு பத்திரிகை அனுப்புகிறார். கண்ணம்மா நான் கண்டிப்பாக வருகிறேன் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!