முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்க போகும் கதிர் தனம், கஸ்தூரி கேள்விகளால் அதிர்ச்சி அடையும் மீனா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் முல்லை கதிருடன் மருத்துவமனைக்கு கிளம்புகிறார். அங்கே டிரீட்மென்ட் நடக்க இருக்கிறது. மறுபக்கம் கஸ்தூரி வீட்டிற்கு வர முல்லைக்கு கொஞ்ச நாள் காத்திருந்து இருக்கலாம் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா கஸ்தூரிக்கு ஐஸ்வர்யா பதிலடி கொடுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் முல்லையிடம் எல்லாம் எடுத்துவிட்டியா என கேட்க எல்லாம் எடுத்துக் கொண்டேன் என சொல்கிறார். பின் தனம் நல்ல அத்தையை வேண்டிக் கொள் என சொல்ல எதோ மறந்துவிட்டது போல இருக்கிறது என தனம் சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா பணம் எடுத்துக் கொண்டீர்களா என கேட்கிறார். ஐயோ மறந்துவிட்டேன் என தனம் சொல்ல பணத்தை எடுத்துக் கொண்டு வருகிறார். பின் ஐஸ்வர்யா கடைக்கு சென்றுவிடுவார் நீ குழந்தைகளை தனியாக பார்த்துக் கொள் என தனம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் தனம் நாங்க வர நேரம் ஆகும் இருவரும் சாப்பிட்டுவிடுங்கள் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின் தனம் முல்லை கதிர் மருத்துவமனையில் காத்திருக்கின்றனர். தனம் முல்லையை நிதானமாக இருக்க சொல்கிறார். ஆனால் முல்லை பயமாக இருப்பதாக சொல்கிறார். கதிரை பணம் கட்டிவிட்டு வர சொல்ல கதிர் கட்ட செல்கிறார். அங்கே நிறைய பணம் கட்ட சொல்ல கதிர் வருத்தப்பட்டு கட்டுகிறார். பின் முல்லையை டாக்டர் அழைக்க தனம் பணம் தயார் செய்ய நேரமாகிவிட்டதாக சொல்கிறார். பின் முல்லையை பரிசோதனை செய்ய டாக்டர் கூட்டி செல்ல கதிர் பதட்டமாக இருக்கிறார். அப்போது தனம் கதிருக்கு தைரியம் சொல்கிறார்.
மறுபக்கம் வீட்டிற்கு கஸ்தூரி வருகிறார். அப்போது ஐஸ்வர்யா மோர் கொடுக்க தனம் எங்கே என கேட்கிறார். தனம் அக்கா முல்லை அக்காவை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக சொல்ல ஒரு வழியாக மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார்களா என கேட்கிறார். எல்லாம் தெரிந்து கொண்டே கேட்காதீங்க என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் பாண்டியன் அழாமல் இருப்பான என கேட்கமீனா அக்கா பால் கொடுப்பார் என சொல்கிறார்.இந்த டிரீட்மென்ட் செய்தால் குழந்தை கண்டிப்பாக பிறக்குமா என கேட்க சிலருக்கு ஒரு முறை பிறக்கும் சிலருக்கு 2 3 முறை ஆகும் என சொல்கிறார். பின் கஸ்தூரி பரிகாரம் செய்துருக்கு இன்னும் 2 மாதம் காத்திருக்கலாம் என சொல்கிறார்.
வெண்பாவை கைது செய்த போலீசார், பாரதியை போகவிடாமல் செய்த சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!
பணத்திற்கு என்ன செய்கிறீர்கள் என கேட்க அப்போது ஐஸ்வர்யா நாங்களே பணத்தை அச்சடிக்கிறோம் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் மீனாவிடம் இப்படி மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றால் அது வேற ஒருவரின் குழந்தையாக இருக்குமாம் என கேட்க மீனா அது ஆம்பளைக்கு குழந்தை இல்லாமல் இருந்தால் தான் அப்படி என சொல்கிறார். பின் கஸ்தூரி பேசிவிட்டு பாத்ரூம் செல்கிறார். முல்லைக்கு ஊசி போட்டு எல்லா டிரீட்மென்ட் முடிந்துவிட டாக்டர் மாத்திரைகளை எழுதி கொடுக்கிறார். பின் கதிர் அதை வாங்க செல்ல காசு அதிகமாக இருக்கிறது. பின் ஆட்டோவில் மூவரும் வர ஆட்டோவை குலுங்கி குலுங்கி ஓட்டுகிறார் ட்ரைவர் உடனே கதிர் ஆட்டோவைஓட்டி முல்லையை அழைத்து செல்கிறார்.