வெண்பாவை கைது செய்த போலீசார், பாரதியை போகவிடாமல் செய்த சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

0
வெண்பாவை கைது செய்த போலீசார், பாரதியை போகவிடாமல் செய்த சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
வெண்பாவை கைது செய்த போலீசார், பாரதியை போகவிடாமல் செய்த சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
வெண்பாவை கைது செய்த போலீசார், பாரதியை போகவிடாமல் செய்த சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா கையெழுத்து போடாமல் இருப்பதால் பெயில் ரத்து செய்யப்பட்டு வெண்பாவை போலீசார் கைது செய்கின்றனர். பாரதி அப்போது உதவி செய்ய போக சௌந்தர்யா போக விடாமல் தடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பாவை போலீசார் கைது செய்ய வர அப்போது ஷர்மிளா என்ன காரணம் என கேட்கிறார். அப்போது வெண்பா கையெழுத்து போடவில்லை அதனால் பெயில் ரத்து செய்யப்பட்டது என சொல்கிறார். பின் ஷர்மிளா வெண்பாவை சத்தம் போட்டு அவரை கூட்டிக் போக சொல்கிறார். பின் சௌந்தர்யா பெண் பிள்ளைகளை பக்கத்தில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என சௌந்தர்யா ஷர்மிளாவிற்கு அறிவுரை சொல்கிறார். 10 ஆண்டுகள் வெண்பாவை விட்டது தான் இந்த நிலைமைக்கு காரணம் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் பாரதி வேகமாக கிளம்ப சௌந்தர்யா தடுத்து நிறுத்துகிறார். அப்போது எங்கே போகிறாய் என சௌந்தர்யா கேட்க முக்கியமான வேலை இருப்பதாக பாரதி சொல்கிறார். என்ன வேலை என சௌந்தர்யா கேட்க வெண்பா பாவம் அவளுக்கு நான் உதவி செய்ய போகிறேன் என சொல்கிறார். அப்போது பாரதி என்னுடைய தோழி என்னுடைய கஷ்டமான சூழ்நிலையில் என்னுடன் இருந்தால் ஆனால் இப்போது என கேட்கிறார். பின் சௌந்தர்யா உன்னை நம்பி தான் விக்ரம் மருத்துவமனை திறந்து வைத்திருக்கிறார். இப்போது நிகழ்ச்சி நடக்கிறது. அதை விட்டுவிட்டு எப்படி போவ விக்ரம் உன்னை தேடுவான் என சொல்ல அந்த நேரம் விக்ரம் போன் செய்கிறார்.

உடனே பாரதியை கூப்பிட பாரதி உள்ளே செல்கிறார். பின் ஷர்மிளா வீட்டிற்கு செல்ல அங்கே சாந்தி வெண்பா எங்கே என கேட்கிறார். அப்போது ஷர்மிளா போலீஸ் புடித்துவிட்டது என சொல்ல ஏற்கனவே வெண்பாவை போலீஸ் கைது செய்ததா என கேட்கிறார். அப்போது சாந்தி ஆமாம் என சொல்ல, எதனால் என கேட்கிறார்.பின் சாந்தி அம்மா சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்ததால் தான் கைது செய்யப்பட்டதாக சொல்கிறார். பின் ஷர்மிளா அவளை 10 ஆண்டுகளாக விட்டது என் தப்பு தான் என சொல்கிறார்.

கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – Indane நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

மறுபக்கம் பாரதி மருத்துவமனையில் இருக்க கண்ணம்மா வருகிறார், என்ன விஷயம் என கேட்க நாளை வேளைக்கு செட்டுல் தயார் செய்திருக்கேன் என சொல்கிறார். அப்போது பாரதி வேறு எதாவது திட்டத்துடன் வந்துருக்கியா என கேட்க அதெல்லாம் இல்லை நான் இங்கே வேலை பார்க்க தான் என சொல்கிறார். பின் கண்ணம்மா தயார் செய்த திட்டத்தை பார்த்துவிட்டு பாரதி எல்லாமே தவறு என சொல்கிறார். ஒன்னும் தெரியாமல் ஏன் வேலைக்கு வந்தாய் என சொல்கிறார். பின் கண்ணம்மா நான் மாத்தி கொண்டு வருகிறேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா விக்ரமிடம் வேலை எல்லாம் சொல்ல, விக்ரம் நீங்க என்னிடம் சொல்லிவிட்டு போக வேண்டாம் என சொல்கிறார். பின் கண்ணம்மா எனக்கு ஒரு பொண்ணு இருக்கிறாள் அவளை என்னுடன் வைத்துக் கொள்கிறேன் என சொல்கிறார். விக்ரம் அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!