முல்லையை சமாதானப்படுத்தும் குடும்பத்தினர், குறைகூறும் ஜனார்த்தனன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் குழந்தை பிறக்காததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கும் முல்லையை மூர்த்தி, தனம் உட்பட வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து சமாதானப்படுத்த, இதெல்லாம் சாபமாக இருக்கும் என்று ஜீவாவிடம் பேசுகிறார் ஜனார்த்தனன்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குழந்தை பிறக்காது என்று தெரிந்து கொண்ட பிறகு கவலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற முல்லையை ஒரு வழியாக தேடிப் பிடித்து சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறார் கதிர். பிறகு முல்லைக்கு எல்லாரும் ஆறுதல் சொல்ல அவரும் ஓரளவுக்கு சமாதானம் ஆகிறார். இதனை தொடர்ந்து இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடில் காலை எழுந்ததும் முல்லையை நினைத்து தனத்திடம் சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருக்கும் கதிர் எனக்கு குழந்தை எதுவும் தேவையில்லை அண்ணி, முல்லை மட்டும் போதும் என்று கூறுகிறார்.
பாரதி கண்ணம்மா தொடரில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வருண் – பாரதிக்கு அனைத்து உண்மையும் தெரியவருமா?
பிறகு வெளியில் இருந்து வரும் மூர்த்தி, முல்லையை கூப்பிட்டு அவருக்கு காரைக்குடியில் இருந்து வடை வாங்கி வந்ததாக சொல்லி தட்டில் வைத்து கொடுக்கிறார். எனக்காக ஏன் மாமா அங்க வர போயிட்டு வரீங்க என்று முல்லை கேட்க, மனசில் எத்தனை கவலைகள் இருந்தாலும் நல்ல சாப்பிடணும் முல்லை. அப்போது தான் எல்லாம் சரியாகும். இந்த உலகத்தில் தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. எல்லா பிரச்சனையும் சரியாகி ஒரு நாள் சந்தோஷமாக இருப்போம் என்று மூர்த்தி பேசுகிறார். அதை கேட்டதும் கண் கலங்கும் முல்லையிடம் மிளகாயை கடித்து விட்டாயா என்று கேட்கும் தனம் வடையை சாப்பிட சொல்கிறார்.
மறுபக்கத்தில் கடையில் வைத்து மூர்த்தி, ஜீவா, கதிர் மூவரும் பேசிக்கொண்டிருக்க நேற்றில் இருந்து எல்லாரும் முல்லையை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கோம். உனக்கு வருத்தம் இல்லையா. நீ, முல்லையின் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறாய் என கதிரிடம் கேட்டு விட்டு ஜீவா கூறி வருத்தப்படுகிறார். இதை கேட்டதும் அங்கிருந்து செல்லும் கதிர் தனியாக நின்று அழுகிறார். இப்போது வீட்டில் வைத்து மீனா, ஐஸ்வர்யா, தனம் எல்லாரும் பேசிக்கொண்டிருக்க முல்லை தனியாக இருப்பதாக சொல்லி விட்டு அவரை கூப்பிடுகிறார்கள்.
பிறகு எல்லாரும் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, எனக்கு குழந்தை இல்லையென்று கயல், பாண்டியனை என்னிடம் தராமல் இருக்க மாட்டீங்களே என்று கேட்க, இதை கேட்டு வருத்தப்படும் மீனா கயலை வேண்டுமானால் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று கூறுகிறார். இப்போது அவர்கள் மூவரும் மூட் அவுட் ஆக இருக்கும் முல்லையை சமைக்க சொல்லி ஒரு வழியாக சமாதானம் செய்கிறார்கள். தொடர்ந்து ஜனார்த்தனனை பார்க்க வரும் ஜீவாவிடம், முல்லையை பற்றி விசாரித்து விட்டு உங்கள் குடும்பத்தில் எதாவது சாபம் இருக்கிறதா.
8 வது படித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை – சம்பளம்: ரூ.50,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !
ஏற்கனவே 15 வருஷமா தனத்திற்கும் குழந்தை இல்லமல் இருந்தது. இப்போது முல்லைக்கும் அப்படி தான் இருக்கு. இதில் மீனா மட்டும் தான் அந்த வீட்டிற்கு வந்த ஒரு வருடத்தில் குழந்தை பெற்றுக்கொண்டாள். அதனால் நீங்கள் அவளுக்கு தான் நன்றி சொல்லணும் என்று வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல பேசி விடுகிறார். அதற்கு, முல்லைக்கு எப்படியாவது ட்ரீட்மென்ட் பண்ணனும் என்று விளக்கம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் ஜீவா. இதனுடன் இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு முடிவடைகிறது.