பாரதி கண்ணம்மா தொடரில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வருண் – பாரதிக்கு அனைத்து உண்மையும் தெரியவருமா?
பாரதி எப்போது தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்வார் என ரசிகர்கள் பொறுமை இழந்து காத்து கொண்டிருக்கும் நிலையில் வருண் இந்த சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும்படியாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கண்ணம்மா மீது உள்ள கோவம் மட்டும் பாரதிக்கு துளி கூட குறையவே இல்லை. இவர்கள் எப்போது தான் ஒன்றாக இணைந்து வாழ்வார்கள் என ரசிகர்களும் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.
ஆலியா மானசாவின் மூத்த மகள் ஐலாவின் 2வது பிறந்தநாள் கொண்டாட்டம் – ரசிகர்கள் வாழ்த்து!
பாரதி பல ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை வருணுக்கும், கண்ணம்மாவிற்கும் தவறான உறவு இருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கிறார். கண்ணம்மாவும் வருணும் சிறு வயதில் இருந்தே சிறந்த நண்பர்களாக இருந்து வந்தனர். இவர்களின் நட்பை தவறாக சித்தரித்து வெண்பா, பாரதியின் மனதில் தவறான எண்ணத்தை புகுத்தினார். இந்நிலையில் தீடிரென வருண் கதாபாத்திரம் காணாமல் போய் விட்டது. இதற்கிடையே தனது அப்பா யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் லட்சுமி ஈடுபட்டிருந்தார்.
லட்சுமி செய்த காரியத்தால் கோபமடைந்த கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த திருப்பம்!
தற்போது ஒரு வழியாக தனது அப்பா யார் என்பதை லட்சுமி தெரிந்துகொண்டு அமைதியாக இருந்து வருகிறார். கண்ணம்மாவிடம் கூட இந்த விஷயத்தை பற்றி கேட்காமல் அமைதியாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் வருண் சீரியலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்கு பிறகாவது பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா, கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்துகொள்வாரா, இந்த அனைத்து பிரச்சனைக்கும் வெண்பா தான் காரணம் என்பதை தெரிந்துகொண்டு ஒரேடியாக வெண்பாவை தன்னுடைய வாழ்க்கையில் இருந்து தள்ளி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.