விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமான முல்லை – மகிழ்ச்சியில் கதிர்! அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யாவிற்கும் மீனாவிற்கும் நாளை பிறந்தநாள் என்பதால் அனைவரும் குடும்பத்துடன் அவர்களுக்கு சப்ரைஸ் செய்ய இருக்கின்றனர். இந்நிலையில் முல்லைக்கு குழந்தை இருப்பது போல கனவு வந்த நிலையில் அடுத்து என்ன மாதிரி திருப்பங்கள் வரும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவி சீரியல்களுக்கு சின்னத்திரையில் மவுசு அதிகம் அந்த வகையில் பல டாப் சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் நெகட்டிவ் ரோல் இல்லாத சீரியல் என்ற பெருமைக்குரிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் TRPயில் முதல் மூன்று இடங்களை பிடித்துவிடும். இந்த சீரியல் அண்ணன் தம்பிகள் சேர்ந்து பாசத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்தி குடும்பத்தை முன்னேற்றுவது பற்றியும், ஒரு குடும்பம் என்றால் அதில் சின்ன சின்ன சண்டைகள் வரும், அதை பெரிது படுத்தாமல் ஒற்றுமையாக எப்படி இருப்பது என்பதற்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறது.
ஒரு தாயின் உயிரை காப்பாற்றிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி – கண்கலங்கிய புகழ் & சிவாங்கி!
அதனால் ஏகப்பட்ட குடும்ப ரசிகர்கள் விரும்பி இந்த சீரியலை பார்க்கின்றனர். சென்ற வாரம் முதல் புது கடை திறப்பு விழா என சந்தோசமாக குடும்பமே இருந்தது. ஆனால் அந்த குடும்பத்தில் மிகப்பெரிய சோகம் ஒன்று வர இருக்கிறது. அதாவது குடும்பத்தில் காதல் ஜோடிகளாக வலம் வரும் கதிர் முல்லைக்கு பெரிய சோகம் ஒன்று வர போகிறது, குழந்தை வேண்டும் என ஆசையுடன் முல்லை இருக்க, டாக்டர் கதிரிடம் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என சொல்கிறார். இந்த உண்மையை கதிர் எல்லாரிடமும் சொல்லாமல் மறைகிறார்.
கோர்ட்டிற்கு கோபியை மனைவி உடன் வர சொன்ன வக்கீல், வருவாரா பாக்கியா? இன்றைய எபிசோட்!
இந்நிலையில் முல்லைக்கு அதிகாலையில் குழந்தையுடன் வருவது போல கனவு வருகிறது. அதில் முல்லை குழந்தை சிரிப்பதை பார்த்து சிரிக்க கதிர் எழுந்து பார்த்து அவரை எழுப்புகிறார். எழுந்த முல்லை அதிகாலை கனவு பலிக்கும் அதனால் விரைவில் நமக்கு குழந்தை பிறக்க போகிறது என சொல்ல, முல்லையை நினைத்து கதிர் வருத்தப்படுகிறார். தற்போது அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் முல்லைக்கும் குடும்பத்தினருக்கும் உண்மை தெரியவர, அதனால் அவர்கள் மிகவும் வருத்தப்படுகின்றனர். பின் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்த்து குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது போல கதை கொண்டு செல்லப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.