TN TRB அரசு ஆசிரியர் பணிக்கு நியமன தேர்வுகள் ரத்து – முதல்வரிடம் கோரிக்கை!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேறு தேர்வுகள் நடத்தப்படாமல் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வின்(TET) மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த தகுதித் தேர்வு நடைமுறை அமலுக்கு வந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கு முதல் தாளும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டாம் தாளும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்பு பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றொரு தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
TNPSC குரூப் 4 VAO 5000 காலிப்பணியிடங்கள், புதிய பாடத்திட்டம் – தேர்வாணைய தலைவர் முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் மற்றொரு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் பணியில் சேர பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு மற்றும் நியமன தேர்வு எழுத வேண்டும். கடந்த 2012ம் ஆண்டு முதல் நியமன தேர்வு கொண்டுவரப்பட்டது. அதனால் தேர்வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஆட்சியிலும் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு கால அட்டவணை 2022!
ஆனால் அப்போதைய அரசு இதை கண்டுகொள்ளவில்லை. தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்த போதும் ஆசிரியர்களுக்கான நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது என்று தெரிவித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.