கோர்ட்டிற்கு கோபியை மனைவி உடன் வர சொன்ன வக்கீல், வருவாரா பாக்கியா? இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், தாத்தாவிற்கு ஈஸ்வரி எல்லாம் செய்கிறார். பின் செழியன் ஜெனியை தனியாக சென்றுவிடுவோம் என சொல்கிறார். கோபி கோர்ட்டிற்கு பாக்கியா வர வேண்டும் என சொன்னதால் கோபி பதட்டம் அடைகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், தாத்தா தூங்கி கொண்டிருக்கும் போது சத்தம் போட ஈஸ்வரி வந்து அவருக்கு தேவையான வேலைகளை செய்கிறார். பின் ஈஸ்வரி நீங்க நன்றாக இருந்தால் எல்லாம் எனக்கு பார்ப்பீங்க அது போல தான் நானும் உங்களை பார்க்க வேண்டும் என சொல்கிறார். பின் செழியன் தூக்கம் வராமல் இருக்க ஜெனி படுத்தால் தூக்கம் வந்துவிடும் என சொல்கிறார். பின் செழியன் வீட்டில் இருந்து வேலை செய்வது எல்லாம் முடிந்துவிடும், அடுத்த மாதம் முதல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என சொல்லி இருப்பதாக சொல்கிறார்.
பின் ஜெனி ரொம்ப நல்லது வீட்டில் இருந்து எதாவது சொல்லாமல் இருந்தாலே போதும் என சொல்கிறார்.பின் செழியன் ஆபிஸிற்கு வீட்டில் இருந்து ரொம்ப தூரம் என சொல்ல, நாம ஆபிஸ் அருகே வீடு பார்த்து சென்று விடுவோம் என சொல்கிறார். ஜெனி அதெல்லாம் சரியாக வராது என சொல்லி தூங்க செல்கிறார். பின் கோபி வக்கீலை பார்க்க வர அவர் நாளை கோட்டிற்கு வர வேண்டும் என சொல்கிறார். அப்போது உங்க மனைவியும் வர வேண்டும் என சொல்ல, கோபி பதட்டம் அடைகிறார்.
கோபி ஒரு மாதிரி இருப்பதை பார்த்து ராதிகா என்ன ஆச்சு என கேட்கிறார். நேரில் வர வேண்டும் என சொன்னதை நினைத்து தான் பதட்டமாக இருக்கிறது என கோபி சொல்கிறார். விவாகரத்து வேண்டும் என்றால் கோர்ட்டிற்கு வர வேண்டும் என தெரியாதா என ராதிகா கேட்க, தெரியாது போல என கோபி சொல்கிறார். அவர் பதட்டமாக இருப்பதை பார்த்து ராதிகா கோவப்பட, கோபி என் மனைவி எல்லாத்துக்கும் பணம் கேட்பாள் என சொல்லி சமாளிக்கிறார். பின் எல்லாத்தையும் கொடுத்துவிடுங்கள் என சொல்ல , கோபி எதுவும் பேசாமல் கிளம்புகிறார்.
அப்பாவை தேடி அலையும் லட்சுமி, பாரதிக்கு திருமணம் பற்றி சௌந்தர்யாவிடம் சொன்ன ஹேமா – இன்றைய எபிசோட்!
பின் கோபி வீட்டிற்கு வந்து பாக்கியாவிடம் நாளை உனக்கு எதாவது வேலை இருக்கிறதா என கேட்கிறார். அதற்கு பாக்கியா இல்லை என சொல்ல, கோபி நாளைக்கு கோர்ட்டிற்கு போக வேண்டும் என சொல்கிறார். பாக்கியா நாளை எதற்கு என கேட்க, அன்னைக்கு பேப்பரில் கையெழுத்து வாங்கினேன் அதற்காக தான் என சொல்கிறார். கோபி ராதிகா சொன்னதை நினைத்து பார்க்க, பின் ரூமிற்கு போகிறார். அப்போது பாக்கியாவை அழைத்து நான் வெளியே போகிறேன் என சொல்கிறார்.