அப்பாவை தேடி அலையும் லட்சுமி, பாரதிக்கு திருமணம் பற்றி சௌந்தர்யாவிடம் சொன்ன ஹேமா – இன்றைய எபிசோட்!

0
அப்பாவை தேடி அலையும் லட்சுமி, பாரதிக்கு திருமணம் பற்றி சௌந்தர்யாவிடம் சொன்ன ஹேமா - இன்றைய எபிசோட்!
அப்பாவை தேடி அலையும் லட்சுமி, பாரதிக்கு திருமணம் பற்றி சௌந்தர்யாவிடம் சொன்ன ஹேமா - இன்றைய எபிசோட்!
அப்பாவை தேடி அலையும் லட்சுமி, பாரதிக்கு திருமணம் பற்றி சௌந்தர்யாவிடம் சொன்ன ஹேமா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பாரதிக்கு திருமணம் செய்து வைக்க போகிறேன் என சௌந்தர்யாவிடம் சொல்கிறார். சௌந்தர்யா அதை கேட்டு கோவப்படுகிறார். பின் லட்சுமி அப்பாவை கண்டுபிடிக்க போலீஸ் ஒருவரிடம் உதவி கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வடிவு கண்ணம்மாவிற்கு கொழுக்கட்டை செய்து கொண்டு வந்து கொடுக்க கண்ணம்மா எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார். வடிவு என்னாச்சு என கேட்க, அந்த வெண்பா திடீரென ஹேமா ஸ்கூலிற்கு வந்து விசாரிக்கிறாள் அதெல்லாம் சரி இல்லை அவ எதற்கு வர வேண்டும் என கேட்க, நேரடியாக சென்று நாம கேட்டுருவோமா என வடிவு கேட்கிறார். அவளிடம் எதோ திட்டம் இருக்கிறது. முதலில் அதை கண்டிபிடிக்க வேண்டும் என வடிவு சொல்ல சரி என கண்ணம்மா சொல்கிறார். மறுபக்கம் பாரதி காலையில் சாப்பிடாமல் போயிருக்கான் என சொல்ல வேணு வேலை இருக்கும் என சொல்கிறார்.

திருமணத்திற்கு பின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய ஆர்யன் – ஷபானா தான் காரணமா?

அப்போது ஹேமா வர, என்ன இன்னைக்கு ஸ்கூலில் நடந்தது என சௌந்தர்யா கேட்கிறார். அப்போது வெண்பாவும் பாரதியும் வந்ததாக சொல்ல, அவளுக்கு என்ன திடீர் அக்கறை என சௌந்தர்யா கேட்கிறார். பின் ஹேமா முக்கியமான விஷயம் ஒன்று உங்களிடம் சொல்லவேண்டும் என சொல்லி, அப்பாவிடம் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வேண்டும் நானே புது அம்மா கூட்டிக் கொண்டு வருகிறேன் என சொன்னேன் என சொல்ல, உனக்கு எல்லாம் தெரியுமா என வேணு கேட்க, அப்பா தனியாக கஷ்டபடுகிறார் அவரை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் என சொல்ல, இந்த வீட்டில் இத்தனை பேர் இருக்கிறோம் நாங்க எல்லாரும் பார்த்துக் கொல்லமாட்டோமா என கேட்டு கோபப்படுகிறார்.

அதற்கு டாடி என்ன சொன்னான் என சௌந்தர்யா கேட்க, அவர் நீ இதை எல்லாம் பேச கூடாது என சொல்லிவிட்டதாக சொல்கிறார். பாரதிக்கு பொண்ணு யாரு என கேட்க, அதை நான் கண்டிபிடித்துவிடுவோம் என சொல்கிறார். மறுபக்கம் லட்சுமி ஸ்கூல் விட்டு அமர்ந்திருக்க குமார் வந்து கூப்பிட வருகிறார். ஆனால் லட்சுமி நான் ஒருவரை பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்ல குமார் கிளம்பிவிடுகிறார். பின் போலீஸ் ஒருவர் அவர் மகளை அழைக்க வர அவரிடம் லட்சுமி என் அப்பாவை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என சொல்கிறார்.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!

உன் அப்பா பெயர் என்ன என கேட்க, அவர் பெயர் பாரதி என தான் தெரியும் நான் அவரை பார்த்ததே இல்லை என சொல்கிறார். இத்தனை வருடத்தில் நீ பார்த்ததே இல்லையா ஆதார் கார்ட் இருக்காது, உங்க வீட்டில் ரேஷன் கார்ட் இருக்கிறதா என தேடி பார் என சொல்கிறார். ஓகே நான் பார்க்கிறேன் என லட்சுமி சொல்ல, நான் உன் அப்பாவை கண்டுபிடிக்கிறேன் என அந்த போலீஸ் சொல்கிறார். பின் கண்ணம்மாவிடம் வடிவு வெளி ஊருக்கு எங்கையாவது போகலாமா என கேட்க கண்ணம்மா சரி என சொல்கிறார். லட்சுமி இன்னும் வரவில்லையா என கேட்க, இன்னும் வரவில்லை என சொல்கிறார்.

குமார் அப்போது வர லட்சுமி எங்கே என கேட்கிறார். கண்ணம்மா லட்சுமி வரவில்லையே என சொல்ல, உன் பெயரை சொல்லி எதோ தோழியை பார்க்க போறேன் என சொன்னதாக சொல்ல, கண்ணம்மா பதட்டம் அடைகிறார். அப்போது வடிவு லட்சுமி தெளிவான பொண்ணு தான் என சொல்ல, இல்லை இன்று மதியம் அப்பா பற்றியே பேசிக் கொண்டிருந்தாள், அவள் குழப்பமான மனநிலையில் இருந்தால் என சொல்ல, ஒரு வேலை ஸ்கூல் முடிந்ததும் அப்பாவை தேடி சென்றிருப்பாளோ என நினைக்கிறார். பின் கண்ணம்மா லக்ஷ்மியை தேடி செல்கிறார்.

லட்சுமி அப்பாவை பற்றி நினைத்துக் கொண்டே நடந்து வர, பாரதி காரை வைத்து இடித்துவிடுகிறார். அப்போது ஹேமா பார்த்து லட்சுமி என சொல்ல, வேகமாக சென்று பாரதி தூக்குகிறார். எதுவும் அடி படவில்லையே என கேட்க, எப்போதும் ஆட்டோவில் தான போவ என ஹேமா கேட்க எனக்கு ஒரு வேலை இருந்தது என லட்சுமி சொல்கிறார். அப்படி என்ன வேலை என கேட்க, என் தோழி அம்மா போலீஸ் அவரிடம் அப்பாவை கண்டுபிடிக்க முடியுமா என கேட்க சென்றேன் என சொல்கிறார். நான் அன்னைக்கே சொன்னேன்ல அப்பாவை கேட்க கூடாது என சொல்ல, அதான் என் அப்பாவை நானே கண்டுபிடிக்கலாம் என சொன்னதாக சொல்கிறார்.

பின் காரில் கூட்டிக் கொண்டு பாரதி கிளம்புகிறார். அப்போது லட்சுமி ஹேமாவிடம் நம்ம ஸ்வேதாவின் அம்மா போலீஸ் தான அவரிடம் உதவி கேட்க போனேன் என சொல்கிறார். உனக்கு போலீஸ் பார்த்தால் பயமாக இல்லையா என ஹேமா கேட்க இருந்தது ஆனால் அப்பாவை கண்டுபிடிக்க வேண்டும் அதனால் தான் என லட்சுமி சொல்கிறார். அவங்க கண்டுபிடித்து கொடுப்பார்களா என கேட்க, போட்டோ இருந்தால் கண்டுபிடிக்கலாமா என கேட்க, போட்டோ இல்லை என லட்சுமி சொல்கிறார். பின் ரேஷன் கார்ட் இருந்தால் கண்டுபிக்கலாம் என சொன்னதாக சொல்கிறார்.

ரசிகர்களால் கடுப்பான ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை – நடந்தது என்ன? ஷாக் ஆக்கிய தகவல்கள்!

அப்போது பாரதி முதன்முறையாக ரேஷன் கார்ட் வாங்கியதை கண்ணம்மா காட்டியதை நினைத்து பார்க்கிறார். கண்ணம்மா பாரதி பெயர் குடும்பத்தலைவன் என பெயர் வந்ததை நினைத்து சந்தோசப்படுகிறார். உடனே பாரதி அந்த ரேஷன் கார்ட் இருக்கிறதா என முதலில் தேட வேண்டும் அதில் என் பெயர் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைக்கிறார். பின் கண்ணம்மா லக்ஷ்மியை தேடி வர பாரதி கார் அந்த பக்கம் வருகிறது. ஹேமா அதை பார்த்து சமையல் அம்மா என கத்த கண்ணம்மாவும் அவரை பார்க்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!