மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு? சம்பள கணக்கீடு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு? சம்பள கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு? சம்பள கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு? சம்பள கணக்கீடு விவரங்கள் இதோ!

தற்போது 65 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகையை 3% உயர்த்தி மொத்தம் 34% ஆக மாற்றுவதற்கு அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் ஊதியமும் உயர்வடைய இருக்கிறது.

DA உயர்வு

நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும், 18 மாதங்களுக்கான DA நிலுவைத்தொகையை ஹோலி பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனுடன் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனவரி 1, 2022 முதல் அகவிலைப்படியை 3% அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் 65 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி (DA) பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோர்ட்டிற்கு கோபியை மனைவி உடன் வர சொன்ன வக்கீல், வருவாரா பாக்கியா? இன்றைய எபிசோட்!

தற்போது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி தொகை (DA) 31% ஆக உள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் இது 34% ஆக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு அகவிலைப்படியை 3% அதிகரித்து, 34% ஆக கொண்டு வந்த பிறகு சம்பள உயர்வு ஏற்படும். பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை ஜனவரி முதல் ஜூலை வரை ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படுகிறது. மேலும் தற்போதைய அகவிலைப்படியை ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலம், இந்த DA தீர்மானிக்கப்படுகிறது.

வீட்டுக்கடன் பெற்று சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைந்த வட்டி விகிதமுடைய வங்கிகள்!

DA கணக்கீடு:

அகவிலைப்படி சதவீதம் = ((AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களில்-115.76)/115.76) x 100.

இப்போது ஊடக அறிக்கைகளின்படி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் மார்ச் மாதத்தில் DA நிலுவைத் தொகை உட்பட முழு சம்பளத்தையும் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அப்படி நடந்தால், லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்று JCM தேசிய கவுன்சிலின் ஷிவ கோபால் மிஸ்ரா கூறி இருக்கிறார். அதே போல நிலை-13 அல்லது நிலை-14ல் உள்ள ஊழியர்களுக்கு ரூ.1,44,200 மற்றும் ரூ.2,18,200 என்ற அளவில் DA நிலுவைத் தொகை கிடைக்கும் என்று தெரிகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!