ஐஸ்வர்யாவிற்கு, மீனாவிற்கும் ஒரே நாளில் பிறந்தநாள், இன்பஅதிர்ச்சி கொடுக்க போகும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா ஐஸ்வர்யாவிற்கும் ஒரே நாளில் பிறந்தநாள் வர இருக்கிறது. அதனால் தனம் முல்லை அவர்களுக்கு சப்ரைஸ் செய்ய இருக்கின்றனர். பின் ஜீவா மீனா மறந்தது போல நடிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை மீனாவிடம் தினமும் சண்டை போட வேண்டாம் என சொல்ல, அவர் நீங்க எல்லாரும் சொந்தமாக இருக்கீங்க நான் மட்டும் வேற ஆள் அதனால் தான் எல்லாரும் இப்படி பேசுறீங்க என சொல்கிறார். அதனால் முல்லை கடுப்பாகிறார். பின் கடையில் கதிரும் ஜீவாவும் இருக்க, முல்லை கடைக்கு செல்கிறார். அப்போது கதிர் எங்கே என கேட்டு உள்ளே போக கதிரிடம் கோவமாக பேசுகிறார். இப்போ எதற்கு என்னிடம் கோவமாக பேசுகிறாய் என கேட்க, மீனா ஐஸ்வர்யா சண்டையை சமாதானம் செய்ய போய் நான் கோவப்பட்டது தான் மிச்சம் என முல்லை சொல்கிறார்.
அப்பாவை தேடி அலையும் லட்சுமி, பாரதிக்கு திருமணம் பற்றி சௌந்தர்யாவிடம் சொன்ன ஹேமா – இன்றைய எபிசோட்!
அப்போது ஜீவா வர மீனாவிற்கு நாளை பிறந்தநாள் நல்ல பரிசு வாங்க வேண்டும் என சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யாவும் அங்கே வர எனக்கும் நாளை பிறந்தநாள் என சொல்கிறார். அப்படியா என ஜீவா கேட்க என்ன பரிசு வாங்க போறீங்க எல்லாரும் சொன்ன பரிசை எல்லாம் வாங்கி கொடுத்துடீங்களா என கேட்கிறார். இதுவரை எதுவும் வாங்கி கொடுக்கவில்லை அதனால் தான் இப்போது வாங்கி கொடுக்கலாம் என இருப்பதாக ஜீவா சொல்கிறார். பின் முல்லை வீட்டிற்கு வர தனத்திடம் நாளை இருவருக்கும் பிறந்தநாள் என சொல்கிறார்.
அதை கேட்டு தனம் சந்தோசப்பட இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என சொல்கிறார். பின் இருவருக்கும் ஒரே மாதிரி சேலை வாங்கி கொடுப்போம் என சொல்லி சேலை விற்பவரை வர சொல்கிறார். சேலை விற்பவர் வர இருவருக்கும் ஒரே மாதிரி சேலை வாங்குகிறார். பின் கடையில் ஜீவா கணக்கு முடித்துவிட கண்ணன் வந்து தயக்கத்துடன் நிற்கிறார். அப்போது ஜீவா என்னடா இந்த நேரத்தில் வந்திருக்கிறாய் என கேட்க கண்ணன் ஒன்றுமில்லை என சொல்லி சமாளிக்கிறார். பின் கதிரும் என்ன ஒரு மாதிரி பேசுகிறாய் என கேட்க, நாளைக்கு ஐஸ்வர்யாவின் பிறந்தநாள் அதனால் எதாவது வாங்க வேண்டும் என்பதால் பணம் வேண்டும் என சொல்கிறார்.
வீட்டுக்கடன் பெற்று சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைந்த வட்டி விகிதமுடைய வங்கிகள்!
இதை கேட்க தான் இப்படி நின்றியா என ஜீவா கேட்க, பணத்தை கொடுக்கிறார். இவ்வளவு வேண்டாம் என கண்ணன் சொல்ல, பின் தேவையான பணத்தை வாங்கி கொள்கிறார். இரவு ஜீவாவும் கயலும் இருக்க காயலிடம் உன் அம்மாவிடம் நான் எதுவும் தெரியாத மாதிரி நடிக்க போகிறேன் அதனால் உன் அம்மா கோவப்பட போகிறாள். சரியாக 12 மணிக்கு வாழ்த்து சொன்ன தான் சந்தோசப்படுவாள் என சொல்கிறார். பின் மீனா வந்து நாளை கடைக்கு போக வேண்டுமா என கேட்கிறார். ஆமாம் என சொல்ல, இவனுக்கு எதுவும் நியாபகம் இல்லை என மீனா கோபத்துடன் கயலை தூங்க வைக்கிறார்.