TNPSC குரூப் 4 VAO 5000 காலிப்பணியிடங்கள், புதிய பாடத்திட்டம் – தேர்வாணைய தலைவர் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தேர்வு கால அட்டவணையில் இந்த மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது TNPSC தலைவர் குரூப் 4 தேர்வு குறித்து சில தகவல்களை கூறியுள்ளார்.
குரூப் 4 & VAO தேர்வு
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. இதையடுத்து இந்த மாதத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் குரூப் 4 & VAO தேர்வை லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்கொள்கின்றனர்.
நிறுத்தப்படுமா ரஷ்யா, உக்ரைன் போர்? இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை! உலக நாடுகள் எதிர்பார்ப்பு!
ஏனெனில் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது. அத்துடன் ஒரே ஒரு நிலை கொண்ட எழுத்து தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது. தற்போது TNPSCயின் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வில் 100 வினாக்கள் தமிழ் மொழி பாடப்பகுதியிலிருந்து கேட்கப்படுகிறது. அத்துடன் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் நம்பகத்தன்மையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக இனிவரும் காலங்களில் தேர்வு அறையில் தேர்வு முடிந்தபின் ஓஎம்ஆர் படிவத்தில் இருக்கும் தனிநபர் தகவல்கள் தேர்வு அறையிலேயே பிரித்து எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலை தேடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – 100+ முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் முகாம்!
மேலும் குரூப் 4 & VAO தேர்வு குறித்து TNPSCயின் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இவர் கூறியதாவது, தேர்வு கால அட்டவணையில் அறிவித்தபடி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் கட்டாயமாக வெளியிடப்படும் என்றும் இதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். மேலும் குரூப் 4 தேர்வுக்கு 5000 காலிப்பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை கலந்தாய்வு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.