நிறுத்தப்படுமா ரஷ்யா, உக்ரைன் போர்? இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை! உலக நாடுகள் எதிர்பார்ப்பு!
கடந்த வாரத்தில் இருந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவது தொடர்பாக இரண்டு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் 2ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று (மார்.2) நடைபெற இருக்கிறது.
பேச்சு வார்த்தை
உலக நாடுகளிடையே பேரதிர்ச்சியை உண்டு பண்ணி இருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இன்று (மார்.2) 7வது நாளாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் அதிகபட்சமான இடங்களை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படைகள், தலைநகர் கீவை சுற்றி வளைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த போர் மூலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உக்ரைனில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் நேற்று (மார்.1) பலியானார்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு கால அட்டவணை 2022!
இந்த போருக்கு மத்தியில் உக்ரைனை சேர்ந்த 5 லட்சம் பேர் அகதிகளாக அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. என்றாலும் உக்ரைன் மீதான பிடியை இறுக்கி வரும் ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிடுவது போல தெரியவில்லை. தவிர ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரசை சேர்ந்த ராணுவ வீரர்களும் உக்ரைனில் போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக போர் நடவடிக்கை குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையான அமைதி பேச்சுவார்த்தை பெலாரஸில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் போரை கைவிட்டு விட்டு ரஷ்ய படைகள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று உக்ரைன் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு என்ன முடிவு என்று தீர்மானிக்கப்படாத நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் வேலை தேடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – 100+ முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் முகாம்!
இந்த நிலையில் மீண்டுமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (மார்.2) நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் போலந்து – பெலாரஸ் எல்லையில் 2ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடை மற்றும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளிப்பது குறித்து விவாதங்களை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.