மறுபடியும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் போர்க்களத்தை ஆரம்பிக்கும் மீனா – ப்ரோமோ ரிலீஸ்!
இவ்வளவு நாள் வீட்டில் யாருடனும் சண்டை போடாமல் மீனா அமைதியாக இருந்து வந்தார். தற்போது மீண்டும் முல்லைக்காக மட்டும் பல லட்சங்கள் செலவு செய்தீர்கள். எனக்கு ஏன் தர யோசிக்கிறீர்கள் என சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்து மறுபடியும் முல்லைக்கு சிகிச்சையை தொடங்குவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை தோல்வியடைந்ததால் முல்லை மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார். முல்லையின் மனதை மாற்ற குடும்பத்தினர்கள் அனைவரும் பாக்கியாவின் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் முல்லை பழசை மறந்து கொஞ்சம் சந்தோசமாக இருந்தார்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சிவாங்கிக்காக புகழ் செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!
தற்போது மீண்டும் குடும்பத்தினர்கள் வீட்டிற்கே வந்துவிட்டனர். முல்லைக்கு மறுபடியும் சிகிச்சையை ஆரம்பிப்பது போல தெரியவில்லை. இதற்கு நடுவே கண்ணனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து விட்டார். கல்லூரியில் ரிசல்ட் வரும் வரைக்கும் கடையிலேயே இருக்க போவதாக கண்ணன் கூறுகிறார். ரிசல்ட் வந்த பிறகும் கடையில் தான் கண்ணன் இருக்க போகிறார் என ஐஸ்வர்யா நக்கலாக கூறுகிறார். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டும் என தனம் கூறுகிறார். இதற்கு நடுவே குடும்பத்தினரிடம் மீனா காசு கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
வீட்டில் இருக்கும் செலவுக்கு அத்தியாவசிய பொருட்களையெல்லாம் வாங்க வேண்டாம் என குடும்பத்தினர்கள் கூறிவிடுகின்றனர். உடனே மீனாவிற்கு கோவம் வந்து விடுகிறது. முல்லைக்காக மட்டும் பல லட்சங்கள் செலவு செய்தீர்கள். எனக்கு மட்டும் ஏன் காசு தரமாட்டேங்குறாங்க என மீனா ஜீவாவிடம் கூறுகிறார். ஜீவாவும் குடும்பத்தினருக்கு தான் சப்போர்ட் செய்கிறார். உடனே மீனா வீட்டில் மறுபடியும் போர்க்களத்தை ஆரம்பிப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது.