‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த திருப்பம் – திடீரென கர்ப்பமாகும் ஐஸ்வர்யா!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையின் கர்ப்பம் தொடர்பான செலவுகள் குடும்பத்தில் ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்கி இருக்கும் வேளையில், ஐஸ்வர்யா திடீரென கர்ப்பமாவதை போல தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தமிழ் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் இந்த சீரியலுக்கு குடும்ப ஆடியன்ஸ் அதிகம். அந்த வகையில் குடும்பப்பாங்கான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலின் கதைக்களம் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது சூடு பிடிக்கத் துவங்கி இருக்கிறது. அதாவது, முல்லையின் கர்ப்பம் தொடர்பான மருத்துவ செலவுகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரளயத்தை உருவாக்கி இருக்கிறது.
கோபியின் சுயரூபத்தை அறிந்து கொள்ளும் செழியன் – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
இந்த பிரச்சனையால் இப்போது கதிர் மற்றும் முல்லை இருவரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடிய சூழல் உருவாகி உள்ளது. இதுவரை அண்ணன், தம்பி என்று ஒட்டி உறவாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து கதிர் மற்றும் முல்லை பிரிந்து செல்வது போல வெளியாகி இருக்கும் சமீபத்திய ப்ரோமோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இப்படி எக்கச்சக்கமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா திடீரென கர்ப்பமாவதை போனற தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் சமீபத்திய எபிசோடுகளில் கண்ணன் குழந்தை வேண்டும் என்று பேசுவது போல சில காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வயசில் இதெல்லாம் தேவையில்லை என்று முல்லையும், தனமும் அவரை கிண்டல் செய்தார்கள். இதற்கிடையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களத்தில் இப்போதைக்கு முல்லைக்கு குழந்தை பிறக்கப்போவதில்லை என்று ஒரு சூழல் வந்துள்ள நிலையில் ஐஸ்வர்யா கர்ப்பமாக வாய்ப்புள்ளது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.