பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய முல்லை – இவருக்கு பதில் இனி இவர் தான்!
செயற்கை முறையிலாவது முல்லைக்கு குழந்தை பிறக்குமா என சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சமயத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த காவ்யா சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
சஞ்சீவ், ஆலியாவுக்கு 2வது குழந்தை பிறந்த நேரம் இப்படியும் நடக்குமா? வியக்கும் ரசிகர்கள்!
முல்லையால் இயற்கை முறையின் மூலமாக மட்டுமே கருவுற முடியாது என மருத்துவர் கூறிவிடுகிறார். இதனால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என குடும்பத்தினர்கள் முடிவெடுத்துள்ளனர். செயற்கை முறை கருவுறுதலுக்கு அதிகமாக செலவாகும் என்பதால் இடத்தை விற்கலாம் என மூர்த்தி கூறுகிறார் . எவ்வளவு செலவானாலும் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என முல்லை நினைக்கிறார். இப்படி சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா பட வாய்ப்பின் காரணமாக சீரியலில் இருந்து விலகவுள்ளார். ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து கொண்டிருந்தார். இவருக்கு பதிலாக தான் காவ்யா முல்லையாக அறிமுகமானார். தற்போது காவியாவிற்கு பதிலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியலில் நடித்து வந்த தேஜஸ்வினி கவுடா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவ்யா சீரியலை விட்டு விலகுவதால் ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.