சஞ்சீவ், ஆலியாவுக்கு 2வது குழந்தை பிறந்த நேரம் இப்படியும் நடக்குமா? வியக்கும் ரசிகர்கள்!
விஜய் டிவி சீரியல் மூலமாக அறிமுகமாகிய ஜோடிகள் தற்போது சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ள நேரத்தில் சஞ்சீவுக்கு நடந்த நிகழ்வு குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
ஆலியா மற்றும் சஞ்சீவ்:
சஞ்சீவ், ஆலியா ஜோடிகள் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடர் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். இவர் ராஜா ராணி சீரியலில் ஆலியா உடன் நடித்த காதல் காட்சிகள் மூலமாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். சீரியலில் ஆலியாவுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவ் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி ஆக்கி கொண்டார். காதலுக்கு ஆல்யாவின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழவே, வீட்டை விட்டு வெளியேறி சஞ்சீவை கரம் பிடித்தார். இவர்களுக்கு கடந்த 2020 ல் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பாக்கியாவை ஏமாற்றும் கோபி!
குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். சஞ்சீவ் அவர்களும் காற்றின் மொழி தொடரில் நடித்து அது முடிவுக்கு வர தற்போது சன் டிவி கயல் சீரியலில் எழிலாக நடித்து வருகிறார். இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆலியா கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையிலும் வயிற்றில் குழந்தையுடன் நடித்து வந்தார். குழந்தை பிறக்க குறுகிய நாட்கள் உள்ள நிலையில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகி இருந்தார்.
கோபியின் திருமணத்திற்கு புறப்பட்ட குடும்பத்தினர் – ஷாக்கான பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!
இந்நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ள நேரத்தில் சஞ்சீவுக்கு பெருமை சேரும் விதமாக சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சன் குடும்ப விருதுகள் விழாவில் நட்சத்திர நாயகன் விருதை தட்டிச் சென்றிருக்கிறார். அந்த புகைப்படத்தை ஆல்யா மானசா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, விருது வாங்கிய தனது கணவருக்கு வாழ்த்துகளையும் அதோடு, தானும் தனது குழந்தைகள் அய்லா மற்றும் அர்ஷ் மூவரும் இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.