விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் சீரியலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் நடிகர்களை விட நடிகைக்கு தான் சம்பளம் அதிகம் வழங்கப்படுவதாக வெளியான தகவலை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல மொழிகளில் எடுக்கப்பட்ட ஒரு வெற்றி சீரியல் ஆகும். தமிழில் டாப் வரிசையில் இருக்கும் இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரங்கள் பலர் மக்கள் மனதில் பிரபலமாக இருக்கின்றனர். தொடக்கம் முதல் சாதாரண குடும்பத்தில் நடிக்கும் சக துக்கங்களை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட அண்ணன் தம்பிகள் கஷ்டப்பட்டு போராடி கடையை திறந்து வைத்தனர். விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது.
விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரும் கோபி? பாக்கியாவின் முடிவு என்ன? ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!
இந்நிலையில் பல முக்கிய கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி நடிப்பதால் தான் சீரியல் வெற்றி அடைந்துள்ளது என சொல்லலாம். மாமியார் மருமகள் சண்டை, வில்லி, பழிவாங்குவது என வழக்கமான சீரியல்களை போல இல்லாமல் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகளை தாண்டி எப்படி கூட்டு குடும்பமாக சேர்ந்து வாழ்கிறார்கள் என்ற கதையை மையமாகா வைத்தே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடிக்கிறார்.
விஜய் டிவியில் ரோஷினி & சித்து நடிப்பில் “நம்ம வீட்டு பிள்ளை” சீரியல் – விரைவில் தொடக்கம்!
மேலும் மூர்த்தியாக நடிகர் ஸ்டாலின் முத்து நடிக்கிறார். இவரும் பிரபலமான நடிகர் என்றாலும், இவரை விட நடிகை சுஜிதாவிற்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். அதாவது அவர் ஒரு நாளைக்கு ரூ.17,000 சம்பளம் வாங்குகிறாராம். மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் ஒருநாளைக்கு ரு.12,000, கதிர் ரூ.10,000 ஜீவா ரூ.10,000 கண்ணன் ரூ.6,000, மீனா ரூ.8000, முல்லை ரூ.8000, ஐஸ்வர்யா ரூ.8000 என சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.