அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – வட்டியில்லா அட்வான்ஸ் தொகை!
மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த தகவல் என்னவென்றால் அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா அட்வான்ஸ் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது ஆகும்.
முக்கிய தகவல்
நாடு முழுவதும் கொரோனா எழுச்சி காரணமாக அதிகமான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் ஒத்தி வைக்கப்பட்டு வழங்கப்படாமல் இருந்தது. மேலும் அதிகமான நிதி சுமை நிலவி வருவதால் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு குறித்து எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அகவிலைப்படி குறித்து உயர்வு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் பணவீக்கத்தை சமாளிக்கும் விதமாக,மத்திய அரசு ஊழியர்களுக்கு 10000 ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூ.1000 – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி கிடையாது. இதற்கு முன் ஏற்கனவே 2020ஆம் ஆண்டில் பண்டிகைக் கால அட்வான்ஸ் தொகையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அப்போது அரசு ஊழியர்கள் தங்கள் விருப்பமான பண்டிகைக்கு 10000 ரூபாய் அட்வான்ஸ் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே திட்டத்தை மீண்டும் அறிவிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
PAN கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை – மார்ச் 31 கடைசி நாள்! தவறினால் ரூ.10000 அபராதம்!
இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக இருக்கும். இந்த 10000 ரூபாய் அட்வான்ஸ் பணம், பணவீக்கத்தால் உருவாகியுள்ள நெருக்கடியான சூழலை சமாளிக்க பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சந்தையில் நுகர்வோர் செலவினத்தை தூண்டுவதற்கும் இந்த அட்வான்ஸ் தொகை உதவும் என்று கூறப்படுகிறது. அதன்படி மார்ச் மாதம் ஹோலி பண்டிகைக்கு முன், அட்வான்ஸ் தொகை பற்றி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அட்வான்ஸ் தொகையை அதிகபட்சம் 10 தவணைகளில் திருப்பிச் செலுத்தி விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.