விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரும் கோபி? பாக்கியாவின் முடிவு என்ன? ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இருக்கும் கோபி, விவாகரத்திற்காக கோர்ட்டுக்கு செல்வது போல அடுத்த கட்ட கதைக்களத்திற்கான ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ
சமீப காலமாக பல்வேறு எதிர்பாராத திரைக்கதையுடன், விறுவிறுப்பாக வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதாவது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தனது குடும்பத்திற்கு உத்தமராக தென்பட்டு வரும் கோபி, மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் பழகி வருகிறார். இதை அறிந்து கொண்டு கோபியின் அப்பா ராமமூர்த்தி, கோபியை கண்டிக்க அவரோ தனது காதலில் உறுதியாக இருந்து வருகிறார். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அவர் துளிகூட சிந்திக்கவில்லை.
விஜய் டிவியில் ரோஷினி & சித்து நடிப்பில் “நம்ம வீட்டு பிள்ளை” சீரியல் – விரைவில் தொடக்கம்!
இப்படி இருக்க தன் மீது வெறுப்பு காட்டி வந்தாலும், கணவர் கோபி மற்ற பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கிறார் அப்பாவி பாக்கியா. இந்த நிலையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீர் திருப்பமாக, ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் இருந்து கையெழுத்து வாங்குகிறார் கோபி. இப்போது அந்த விவாகரத்து பத்திரத்தை கோர்ட்டில் பதிவு செய்துள்ளார் ராதிகாவின் வக்கீல்.
கலர்ஸ் தமிழ் புதிய சீரியலில் களமிறங்கும் நடிகை ரட்சிதா – ஹீரோவாக ஜீ தமிழ் நடிகர்!
இதற்கிடையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் குடும்ப செலவுகள், ராமமூர்த்தியின் மருத்துவ செலவுகள், அதனால் ஏற்படும் பிரச்சனை உள்ளிட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இப்படி இருக்க ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் கோபி விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருவது போலவும், பாக்கியாவுடன் ஆன கோபியின் பந்தம் தொடருமா ? அல்லது முடியுமா? என்பது போலவும் ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.