தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்ற ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்த தீபிகா தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சில்லுனு ஒரு காதல் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த தொடரில் தூக்குமாட்டி தற்கொலை செய்யும்படியான காட்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சில்லுனு ஒரு காதல்:
விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் முதலிய தொலைக்காட்சி தொடர்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் விரைவில் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் தீபிகா.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இனிதே நிறைவு பெற்றது – பக்த கோடிகள் மகிழ்ச்சி!
இவர் முகப்பருவின் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். சில மாதங்கள் மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்திருந்தாலும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டங்கள் இருக்கிறது. மேலும், கண்ணன் மற்றும் தீபிகாவின் ஜோடி மக்களுக்கு அதிகமாக பிடித்திருந்தது. மீண்டும் தீபிகாவையே சீரியலில் நடிக்க அனுமதிக்குமாறு ரசிகர்கள் வேண்டி கொண்டனர். முகப் பரு பிரச்சனையை சரி செய்த பிறகு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது தீபிகா, கலர்ஸ் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சில்லுனு ஒரு காதல் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த தொடரில் தீபிகா தூக்குமாட்டி தற்கொலை செய்யும்படியான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது கவுண்டமணி, செந்தில் காமெடி ஒன்றையும் ரீல்ஸ் செய்து தீபிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் இந்த மாதிரியான வீடியோவை விளையாட்டாக கூட போடாதீர்கள் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.