ஐஸ்வர்யாவிற்கு தாலி கட்டும் கண்ணன், அதிர்ச்சியில் ஜீவா & கதிர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணனும், ஐஸ்வர்யாவும் கோவிலில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களை தேடி வந்த ஜீவா, கதிர், பிரசாந்தும் அதனை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ:
கடந்த வாரம் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யாவை பிரசாந்திற்கு திருமணம் செய்து வைக்க அவரை மதுரைக்கு அழைத்து செல்ல திட்டமிடுகின்றனர். ஐஸ்வர்யா கண்ணனுக்கு போன் கூட செய்ய முடியாமல் அவரது போனை உடைத்து விடுகின்றனர். கண்ணன் பற்றி முல்லையிடம் ஐஸ்வர்யாவின் சித்தி சொல்ல முல்லை கண்ணனை திட்டுகிறார். அப்போது தனம் வர முல்லை, கண்ணன் பணம் திருடியதை சொல்கிறார்.
தமிழக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை – இன்று முதல் அமல்!
உடனே மூர்த்தியை அழைத்து அனைத்து உண்மையையும் சொல்ல மூர்த்தி கோபமடைந்து கண்ணனை அடித்து விடுகிறார். கண்ணன் அழுதுகொண்டே வெளியே செல்ல, ஐஸ்வர்யா வீட்டிற்கு தெரியாமல் வெளியே வருகிறார். கண்ணனிடம் தான் வெளியே வந்து விட்டதாக கூறுகிறார். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஐஸ்வர்யாவை காணவில்லை என ஐஸ்வர்யாவின் சித்தி தனத்திடம் சண்டை போடுகிறார்.
ஆகஸ்ட் 2 முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மூர்த்தி அங்கே வந்து ஜீவா, கதிரை அனுப்பி கண்ணனை தேட சொல்கிறார். கண்ணனை, ஜீவா, கதிர் ஒரு பக்கமும், பிரசாந்த் ஒரு பக்கமும் தேடுகின்றனர். கண்ணன் ஐஸ்வர்யா மணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக இருக்கின்றனர். கண்ணன் தாலி கட்ட போக அங்கே ஜீவா, கதிர் வந்து பார்த்து விடுகின்றனர். மேலும் பிரசாந்தும் வருகிறார். கண்ணன் அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இந்த ப்ரோமோ காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் கண்ணனை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வி அனைவரின் மத்தியில் உள்ளது.