ஆகஸ்ட் 2 முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் போதிலும் சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை சிறிது உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டங்களில் நாளை முதல் கடைகள் திறப்பு நேரங்களில் புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்து உள்ளார்.
கடைகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிகரித்து வந்ததை கருத்தில் கொண்டு கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் 2 வாரங்களுக்கு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு பின்பற்றப்பட்ட நிலையில், அதன் பின்னர் தொற்று நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி உள்ளிட்டவை தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மறுபுறம் ஊரடங்கிலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் – அமைச்சர் ஆய்வு!
ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருந்த முழு ஊரடங்கு நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைய இருந்த நிலையில் அது ஆகஸ்ட் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு முதல்வர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். செப்டம்பர் மாதத்தில் கொரோனா 3வது அலை தாக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 1 முதல் 15 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
அந்த வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் கடைகள் திறப்பு நேரத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார். அதன்படி கோவையில் நாளை முதல் தினசரி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முக்கிய சாலைகளில் உள்ள அத்தியாவசிய கடைகள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்க அனுமதிக்கப்படும். பிற கடைகள் இயங்க அனுமதியில்லை. மேலும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்களில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.