ஆகஸ்ட் 5 முதல் தமிழகம் வர RT-PCR பரிசோதனை கட்டாயம் – அமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி முதல் கேரளாவில் இருந்து மாநிலத்திற்குள் நுழையும் அனைவர்க்கும் RT-PCR பரிசோதனை கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மே 10ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் வழங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்து வருகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
தமிழக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை – இன்று முதல் அமல்!
அதன்படி கோவை மாவட்டத்தில் நாளை முதல் கடைகள் திறப்பு நேரத்தில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இந்திய அளவில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. இதனால் அங்கு வார இறுதி முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் மத்திய குழுவும் அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலம் தான் கேரளா. இதனால் மாநில எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஐஸ்வர்யாவிற்கு தாலி கட்டும் கண்ணன், அதிர்ச்சியில் ஜீவா & கதிர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் RT-PCR பரிசோதனை கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து உள்ளார். இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காட்டினாலும் தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படும். மேலும் விமான நிலையங்களில் 13 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை தெரிவிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது எனவும் கூறியுள்ளார்.