பொறுக்கிய பெத்து வச்சிருக்கீங்க.. கண்ணனை குடும்பத்தினர் முன் திட்டும் கஸ்தூரி – இன்றைய எபிசோட்!

0
பொறுக்கிய பெத்து வச்சிருக்கீங்க.. கண்ணனை குடும்பத்தினர் முன் திட்டும் கஸ்தூரி - இன்றைய எபிசோட்!
பொறுக்கிய பெத்து வச்சிருக்கீங்க.. கண்ணனை குடும்பத்தினர் முன் திட்டும் கஸ்தூரி - இன்றைய எபிசோட்!
பொறுக்கிய பெத்து வச்சிருக்கீங்க.. கண்ணனை குடும்பத்தினர் முன் திட்டும் கஸ்தூரி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்து விடும் கஸ்தூரி ஐஸ்வர்யாவை சரமாரியாக அடிக்கிறார். மூர்த்தி வீட்டிற்கு கஸ்தூரி சென்று கண்ணன் செய்வதை குறித்து கூறி விடுகிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சந்திக்க முடிவு செய்கின்றனர். இருவரும் கோவிலுக்கு பின்புறம் உள்ள இடத்தில் சந்திக்க வேண்டும் என்று பிளான் செய்கின்றனர். ஐஸ்வர்யா தனது பாட்டியிடம் தான் வெளியே செல்ல இருப்பதாக கூறுகிறார். இதனால் சந்தேகம் அடையும் கஸ்தூரி அவரை போக விடாமல் தடுக்கிறார். பின், தனத்தின் அம்மா வந்து நிச்சயம் ஆன பெண்ணை சந்தேகப்படுவது தவறானது என்று அறிவுறுத்துகிறார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு? அதிகாரி தகவல்!

பின், ஐஸ்வர்யா சென்று விடுகிறார். கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பேசுகின்றனர். இதனை தூரத்தில் இருந்து பார்த்து விடும் கஸ்தூரி இருவரையும் நன்றாக திட்டுகிறார். அதே போல் ஐஸ்வர்யாவை அடிக்கிறார். இதனை தடுக்கும் கண்ணனை திட்டுகிறார். மூர்த்தி மற்றும் தனம் இருவரிடமும் இது குறித்து கூற போவதாகவும் மிரட்டுகிறார். இதனால் கண்ணன் பயந்து விடுகிறார்.

பின், ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் கஸ்தூரி தந்து அம்மாவிடம் ஐஸ்வர்யா கண்ணனை சந்தித்த விஷயம் குறித்து கூறுகிறார். இதனால் வீட்டினர் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். கஸ்தூரி மூர்த்தி வீட்டிற்கு கோபத்துடன் செல்லுகிறார். அங்கு மூர்த்தியின் வீட்டில் கதிரை பார்க்க மீனாவின் அப்பா மற்றும் அம்மா இருவரும் வருகின்றனர். பின், அவர்கள் சென்றதும் கஸ்தூரி வருகிறார். அவர் கோபத்துடன் வருவதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

கஸ்தூரி அனைவர் முன்பாகவும் கண்ணனை திட்டுகிறார். இதனால் அனைவருக்கும் கோபம் வருகின்றது. கண்ணன் ஐஸ்வர்யாவிடம் பேச கூடாது என்று தான் பல முறை கூறியும் கண்ணன் மீண்டும் மீண்டும் ஐஸ்வர்யாவிடம் பேசுகிறார் என்று குற்றம் சொல்லுகிறார். இதனை கேட்டு வீட்டினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஐஸ்வர்யா வேறு ஒரு வீட்டிற்கு வாழ வேண்டிய பெண் என்றும் அதனால் கண்ணனை பார்த்து நடந்து கொள்ள சொல்லுங்கள் என்றும் எச்சரிக்கிறார். கஸ்தூரி இப்படியாக பேசுவதை கேட்டு வீட்டினர் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“பாரதி கண்ணம்மா” வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!