“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மூர்த்தி வீட்டில் ஸ்பெஷல் நிகழ்ச்சி – சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்கள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி குடும்பத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதில் முன்னணி சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொள்ள இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில வாரங்களாக கண்ணன் திருமணம் செய்த சர்ச்சை, லட்சுமி அம்மா இறப்பு என தொடர்ந்து சோக காட்சிகளாக ஒளிபரப்பாகி வந்தது. அதன்பிறகு கண்ணன் எதிர் வீட்டிற்கு வந்ததையடுத்து குடும்பத்தில் சிறிது சந்தோசம் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் அண்ணன், தம்பிகள் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால் பிரசவ வலியால் துடித்த அண்ணியை தூக்கி மருத்துவமனையில் சேர்த்த கண்ணனை அனைவரும் மறந்து விட்டனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை கதாபாத்திரத்தில் இருந்து காவ்யா திடீர் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் தற்போது மூர்த்தி குடும்பத்தில் முக்கியமான நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிகிறது. அதாவது தனம் மூர்த்தி குழந்தைக்கு பெயர் வைக்க பிரம்மாண்ட ஏற்பாடு நடைபெறுகிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு நல்ல காரியம் என்றால் அதில் சின்னத்திரை நடிகர்கள் கட்டாயம் இருப்பார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ரியோ ராஜ் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கண்ணனை அழைப்பார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.
விவாகரத்திற்கு பிறகு சமந்தா எடுத்த அதிரடி நடவடிக்கை – YouTube சேனல்கள் மீது புகார்!
அது மட்டுமில்லாமல் கண்ணன், ஐஸ்வர்யா, மூர்த்தி மற்றும் ரியோ எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் மூர்த்தி கண்ணனை ஏற்றுக் கொண்டதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும் இது குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவா அல்லது கயல் பிறந்தநாள் விழாவா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பின் கண்ணன் மற்றும் மூர்த்தியை ஒன்றாக பார்த்ததில் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.