“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை கதாபாத்திரத்தில் இருந்து காவ்யா திடீர் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவ்யா அறிவுமணி தற்போது விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கும் கூட்டு குடும்பத்தின் கதையை மையமாக கொண்டுள்ளது. இந்த சீரியலில் நெகட்டிவ் ரோல் எதுவும் இல்லாமல் இதுவரை சென்று கொண்டிருக்கிறது. கடைசி தம்பி கண்ணன் காதல் திருமணம் செய்ததால் குடும்பத்தில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதிர் வீட்டில் குடி வந்து குடும்பத்துடன் நெருக்கமாக தான் இருக்கிறார். மேலும் தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள்.
விவாகரத்திற்கு பிறகு சமந்தா எடுத்த அதிரடி நடவடிக்கை – YouTube சேனல்கள் மீது புகார்!
மேலும் கதிரிடம் முல்லை எனக்கு குழந்தை வேண்டும் என சொல்ல கதிர் பெற்றுக் கொள்ளலாம் என சொல்கிறார். இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த காதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வருகிறார். அவர் மறைவுக்கு பின் அவரை போலவே முக அமைப்புடன் காவ்யா நடிக்க தொடங்கினார். ரசிகர்களும் அவரை முல்லையாக ஏற்றுக்கொண்டனர். தற்போது கதிர் முல்லை நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” அதிரடி ப்ரோமோ – இமான் அண்ணாச்சி உடன் முட்டிக் கொள்ளும் சிபி!
இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து காவ்யா விலக இருப்பதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. காவ்யா அறிவுமணி பிக் பாஸ் புகழ் நடிகர் கவினுக்கு ஜோடியாக தான் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் முல்லை கதாபாத்திரத்தில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அவர் கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா அவர்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.