விவாகரத்திற்கு பிறகு சமந்தா எடுத்த அதிரடி நடவடிக்கை – YouTube சேனல்கள் மீது புகார்!
சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் விவாகரத்தானது. இந்நிலையில் அவர்களது விவாகரத்து குறித்து போலியான தகவல் பரப்பி வந்த யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா புகார் அளித்துள்ளார்.
சமந்தா புகார்:
தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் நாக சைதன்யா. இவர் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவரது மனைவி முன்னணி நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” அதிரடி ப்ரோமோ – இமான் அண்ணாச்சி உடன் முட்டிக் கொள்ளும் சிபி!
இந்த செய்தியானது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பலருக்கு பேசு பொருளாக மாறியது. அவர்களின் விவாகரத்து குறித்து பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பல யூடியூப் சேனல்கள் அவர்களின் விவாகரத்து குறித்து போலியான தகவல்களை பரப்பி வந்தனர். மேலும் இது குறித்து விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டது.
சந்தியாவை தேடி வரும் போலீசார், கோபத்தின் உச்சியில் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
அதனை தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறாக செய்திகளை பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசியதாகவும் கூறி அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது சமந்தா வழக்கு தொடர்ந்தது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.