சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – பிரபல வங்கி வழங்கும் அதிரடி சலுகை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் மற்றும் ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பேங்க் ஆப் இந்தியா:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் முன்னணி வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது பிரபல பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகையாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
UAN – ஆதார் கார்டினை இணைக்கும் எளிய வழிமுறைகள் | PF காப்பீடு பெற ‘இது’ கட்டாயம்!
எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா, கொடாக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை ஹோம், கார் லோன்களில் என பல சலுகைகளை வழங்கி வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது பேங்க் ஆப் இந்தியா குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதம் அக்டோபர் 18 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த வட்டி மாற்றம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை செயலர்!
முன்னதாக வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.85 சதவீதமாக இருந்து வந்த நிலையில் தற்போது 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாகனக் கடன் வட்டி விகிதம் 7.35 சதவீதமாக இருந்து வந்த நிலையில் தற்போது 6.85 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் செயல்பாடு கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய கடன் அல்லது கடன் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வட்டி விகிதம் பொருந்தும் என நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.