உங்கள் பான் கார்டு எடுத்து பல வருடம் ஆகிவிட்டதா? அப்டேட் செய்ய வேண்டுமா? – இதோ உரிய விளக்கம்!

1
உங்கள் பான் கார்டு எடுத்து பல வருடம் ஆகிவிட்டதா? அப்டேட் செய்ய வேண்டுமா? - இதோ உரிய விளக்கம்!
உங்கள் பான் கார்டு எடுத்து பல வருடம் ஆகிவிட்டதா? அப்டேட் செய்ய வேண்டுமா? - இதோ உரிய விளக்கம்!
உங்கள் பான் கார்டு எடுத்து பல வருடம் ஆகிவிட்டதா? அப்டேட் செய்ய வேண்டுமா? – இதோ உரிய விளக்கம்!

இந்திய அரசு வழங்கி வரும் பான் அட்டையின் விவரங்களை குறிப்பிட்ட காலத்தில் புதுப்பிக்க வேண்டுமா என்று பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதற்கான விளக்கம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பான் கார்டு அப்டேட்:

இந்திய நாட்டின் அனைத்து குடிமகன்களும் பான் அட்டையினை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட 10 இலக்க எண்களை கொண்ட பான் கார்டு அளிக்கப்படும். அனைத்து விதமான நிதி தொடர்பான நடவடிக்கைகளும் பான் எண்ணினை அடிப்படையாக கொண்டு தான் இந்தியாவில் செய்யப்படுகிறது. வீட்டு முகவரியினை கொண்ட எந்த வகையான ஆவணத்தையும் வைத்து பான் கார்டு இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்படுகிறது.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இனி டிஜிட்டல் வருகைப்பதிவு – ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்!!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், மத்திய அரசு ஆதார் அட்டையினை குறிப்பிட்ட இடைவெளியில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கும் நிலையில், பான் கார்டினையும் இதேபோல் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமா? என்று மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள், பான் கார்டினை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஒரே ஒரு முறை பான் கார்டு எடுத்தாலே போதும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேநேரம், முகவரி மாற்றம் செய்தால் மட்டும் அதனை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!