100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இனி டிஜிட்டல் வருகைப்பதிவு – ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்!!
கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருகைப்பதிவு:
நாட்டில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2005ம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாட்கள் வரை வேலை வழங்கப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 214 சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும் இதில் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகைப் பதிவை டிஜிட்டல் மயமாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. தற்போது தேசிய மொபைல் கண்காணிப்பு முறை மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது. இந்த செயலியில், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், பஞ்சாயத்து, வருகைப் பதிவு தேதி, பணியாளருக்கான பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் நாள்தோறும் பதிவு செய்யப்படுகிறது.
தமிழக மருத்துவ மாணவர்களுக்கு MBBS சான்றிதழ் – உயர்நீதிமன்ற கிளையின் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்த செயலியில் சில குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஜனவரி 1ம் தேதி முதல் கட்டாயமாக டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜனவரி 1ம் தேதிக்குள் இந்த குறைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.