ராஜா ராணி சீரியல் நடிகையுடன் பிரேக்-அப் செய்த ‘பாக்கியலட்சுமி’ எழில் – வைரல் வீடியோ!

0
ராஜா ராணி சீரியல் நடிகையுடன் பிரேக்-அப் செய்த 'பாக்கியலட்சுமி' எழில் - வைரல் வீடியோ!
ராஜா ராணி சீரியல் நடிகையுடன் பிரேக்-அப் செய்த 'பாக்கியலட்சுமி' எழில் - வைரல் வீடியோ!
ராஜா ராணி சீரியல் நடிகையுடன் பிரேக்-அப் செய்த ‘பாக்கியலட்சுமி’ எழில் – வைரல் வீடியோ!

பாக்கியலட்சுமி சீரியலில் அதிக பெண் ரசிகைகளை கொண்ட பாக்கியாவின் இளைய மகன் எழில், விஜய் டிவி சீரியல் நடிகையை காதலிக்கும் தகவல் நெட்டிசன்களால் பரவி வந்த நிலையில் காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக விஷால் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி :

விஜய் தொலைக்காட்சியின் ப்ரைம் டைம் தொடரான பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில மாதங்களாகவே சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்று இந்த ஆண்டுக்கான விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் பல விருதுகளையும் தட்டி சென்றது. ஆரம்பத்தில் இல்லத்தரசியை மையப்படுத்தியே நகர்ந்து வந்த பாக்கியலட்சுமி சீரியலில், தற்போது தான் பாக்கியாவுக்கு கோபியின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்து, விவாகரத்தில் முடிந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலில் கோபிக்கு அடுத்து அதிக பெண் ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகர் என்றால் அது பாக்கியாவின் செல்ல மகனான இளைய மகன் எழில் தான். விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய விஷால் இன்று சின்னத்திரை நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜே விஷால் காதலிக்கும் பெண் விஜய் டிவி சீரியல் நடிகை என்ற தகவல் நெட்டிசன்களால் பரவி வந்தது. ஏனெனில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் குணச்சித்திர நடிகர் விருது விஜே விஷாலுக்கு வழங்கப்பட்டது.

தன் மகனின் முதல் புகைப்படத்தை வெயிட்ட ரோஜா சீரியல் அர்ஜுன் – வைரலாகும் புகைப்படம்

அப்போது விஷாலுக்கு அடுத்தப்படியாக கேமரா, ராஜா ராணி நடிகை ரியாவுக்கு அதிக ஃபோகஸ் தந்தது. அவரும் வெட்கப்பட்டு புன்னகை செய்தவுடன் ரசிகர்களும் உறுதியே செய்து விட்டனர். மேலும், இந்த தகவலுக்கு இருவரின் தரப்பில் இருந்தும் எவ்வித மறுப்பும் இல்லாததால் ரசிகர்களும் உறுதி செய்தனர். இந்நிலையில் விஜே விஷால் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களில் சிலர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜூ வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்டனர்.

அப்போது ஆங்கர் பிரியங்கா விஷாலிடம் ராஜா ராணி சீரியலை பற்றி பேசிவிட்டு உடனே நீ இப்ப சிங்கிளா? என விஷாலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால் நான் சிங்கிள் தான் என்று சொல்ல, பிரியரிங்கா விளையாட்டாக சத்தியம் பண்ணி சொல்லுடா என்று கேட்டார். அதற்கு ”சத்தியமா அக்கா, 2 மாசமா உங்ககிட்ட பேசல அதனால உங்களுக்கு தெரியல. எனக்கு பிரேக்கப் ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார். தைரியமாக இந்த பதிலை கூறி விட்டு அதற்கு ஸ்வீட்டும் எடுத்து சாப்பிட்டார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!