தன் மகனின் முதல் புகைப்படத்தை வெயிட்ட ரோஜா சீரியல் அர்ஜுன் – வைரலாகும் புகைப்படம்!

0
தன் மகனின் முதல் புகைப்படத்தை வெயிட்ட ரோஜா சீரியல் அர்ஜுன் - வைரலாகும் புகைப்படம்!
தன் மகனின் முதல் புகைப்படத்தை வெயிட்ட ரோஜா சீரியல் அர்ஜுன் - வைரலாகும் புகைப்படம்!
தன் மகனின் முதல் புகைப்படத்தை வெயிட்ட ரோஜா சீரியல் அர்ஜுன் – வைரலாகும் புகைப்படம்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களின் உள்ளம் கவர்ந்த நெடுந் தொடர்களாக வலம் வருகிறது. அந்த வகையில் பல வருடங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் நடிகர் சிபு, தனது மகன் போட்டோவை முதன் முறையாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

ரோஜா சீரியல் அர்ஜுன் :

சின்னத்திரை சேனல்கள் பார்வையாளர்களை ஈர்க்க சீரியல்களையே நம்பி இருக்கின்றன. சன் டிவி தொடங்கியதில் இருந்து அதனுடைய பலம் சீரியல்கள்தான். மேலும் போட்டியாக பல டிவி சேனல்கள் வந்துவிட்டாலும் சன் டிவியின் ஏதாவது ஒரு சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியின் ரோஜா சீரியல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

தமிழ் டிவி சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் சீரியல் ரோஜா உள்ளது. இதில் ஹீரோவாக நடிகர் சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்காவும் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் கணவன், மனைவியாக நடித்து வரும் சிபு சூர்யன், பிரியங்காவிற்கு தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஜூன் மாதம் அர்ஜூனாக நடிக்கும் நடிகர் சிபு சூர்யன் சீரியலை விட்டு கிளம்புகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு அந்த முடிவை கடைசியில் ரசிகர்களுக்காக மாற்றிக் கொண்டார். அந்த அளவுக்கு இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Group I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

மேலும் சிபு சூர்யன், அர்ஜூன் கதாபாத்திரத்திற்காக இரண்டு முறை சன் டிவி விருதையும் கைப்பற்றியுள்ளார். சிபுவுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இணையத்தில் ரசிகர்களும், நடிகர்களும் சிபுவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி இருந்தனர். இருப்பினும் சிபு மகனின் புகைப்படத்தை வெளியிடவில்லை.இந்நிலையில் முதன்முறையாக தனது மகனின் கைவிரலை பிடித்திருக்கு படியான புகைப்படத்தை சிபு தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. இத்துடன் “ நாம் ஒன்றாக இணைந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும்.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மேஜிக்கல் பாண்ட்” என்ற கேப்ஷனையும் சிபு சூர்யன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!