ராதிகா & கோபியை மருத்துவமனையில் ஒன்றாக பார்த்து விடும் பாக்கியா – அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!
கோபி மீது ஏற்கனவே பாக்கியாவிற்கு சந்தேகம் இருந்து வந்தது. இந்த சமயத்தில் தற்போது மருத்துவமனையில் கோபியிடன் ராதிகா இருப்பதை பாக்கியா பார்த்துவிடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய உண்மைகள் அடுக்கடுக்காய் வெளியே வந்து கொண்டிருக்கிறார். எத்தனை நாட்கள் தான் கோபியாலும் உண்மையை மறைத்து வைக்க முடியும். தனது சாமர்த்திய புத்தியால் முடிந்த அளவுக்கு கோபிக்கு அனைவரையும் நம்ப வைத்து கொண்டிருந்தார். ஆனால், தற்போது தான் கோபியின் உண்மை முகம் தெரிய வந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாக்கியாவிற்கு கூட கோபியின் மீது சந்தேகம் வர துவங்கிவிட்டது.
Exams Daily Mobile App Download
அதன்பின்னர் ராஜேஸும் அவ்வப்போது கோபியின் வீட்டிற்கு வந்து சண்டை போட்டு செல்கிறார். இதனால், ஈஸ்வரிக்கும் கோபி மீது சந்தேகம் வர ராமமூர்த்தி தாத்தா அனைத்து உண்மைகளையும் ஈஸ்வரியிடம் கூறிவிடுகிறார். உடனே, கோபிக்கு கால் செய்து இப்பொழுதே வீட்டிற்கு வா என வீட்டில் நடந்த விஷயங்களை கூறுகிறார். ஏற்கனவே, ராதிகாவிற்கு உண்மைகள் தெரியவந்து கோபியை வெறுத்துக்கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் வீட்டிற்கும் உண்மை தெரிந்துவிட்டதே என கோபி பதட்டத்தில் காரை ஒரு லாரி மீது மோதுகிறார். இதனால் உடனடியாக கோபியை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பின்னர், ராதிகா மற்றும் பாக்கியா இருவருக்குமே மருத்துவமனையில் இருந்து நர்ஸ் கால் செய்து உங்களது கணவருக்கு ஆக்சிடன்ட் ஆகி விட்டது உடனே வாருங்கள் என கூறுகிறார்கள்.
பின்பு, பாக்கியா மற்றும் ராதிகா இருவருமே மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது கோபியின் மனைவி உள்ளே போய் கோபியை பார்க்கலாம் என நர்ஸ் கூறும்போது ராதிகா உள்ளே செல்கிறார். இதனை பாக்கியா பார்த்துவிட்டு உடனடியாக நர்ஸிடம் இது பற்றி கேட்கிறார். உள்ளே சென்றவர் தான் கோபியின் மனைவி என நர்ஸ் கூறுகிறார். இதனை கேட்டதும் பாக்கியா நொறுங்கி போய்விடுகிறார். பின்னர், கோபி ராதிகாவிடம் நீ மட்டும் இல்லையென்றால் செத்துவிடுவேன் என கூறுகிறார். இந்த அனைத்தையுமே பாக்கியா கேட்டு கொண்டிருக்கிறார். ராதிகாவும் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாரே என பாக்கியா தவிப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.