கோபியை பற்றிய உண்மைகளையும் தெரிந்து கொண்ட எழில், அதிர்ச்சியில் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!
கோபி மீது பாக்கியாவிற்கு சந்தேகம் வந்தாலும் கூட ஏதேனும் பொய் சொல்லி தப்பித்து கொண்டே இருக்கிறார். இந்நிலையில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் எழிலுக்கு தெரிய வந்து கோபியை எழில் மிரட்டுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை மன்னித்து ராதிகா ஏற்றுக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை தெரிந்ததும் கோபியை விட்டு முழுவதுமாக விலகி விட வேண்டும் என்று ராதிகா நினைக்கிறார். ஆனால் கோபி ராதிகாவை விடுவதாக இல்லை. அவ்வப்போது ராதிகாவின் வீட்டிற்கு வந்து கோபி தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டு கெஞ்சி கொண்டிருக்கிறார். ராதிகா கோபியை அவ்வளவு அசிங்கப்படுத்தியும் ராதிகாவை தேடி வந்தபடியே தான் இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
ராதிகாவின் அம்மாவும், அண்ணனும் கோபியுடன் ராதிகாவை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். உனக்காகத்தானே கோபி இவ்வளவு விஷயங்களையும் செய்தார் என ராதிகாவிற்கு இருவரும் புரிய வைக்க நினைக்கிறார்கள். இங்கேயே இருந்தால் கோபி நம்மை விடமாட்டார் என நினைத்து ராதிகா ஊரைவிட்டுக் கிளம்பி துபாய்க்கு சென்று விடலாம் என ராதிகா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு நடுவில் கோபி மீது பாக்கியாவிற்கும் தற்போது சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. கோபி வேறு யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என நினைத்து கோபியின் போனை எடுத்து பார்க்கிறார்.
ஆதார் எண்ணை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம் – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!
யாரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கோபியிடம் கேட்கிறார். கோபி பாக்கியாவிடம் மாட்டி விடுவாரோ என எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் நாசுக்காக ஒரு பொய்யை சொல்லி கோபி தற்போதும் தப்பித்துக் கொண்டே இருக்கிறார். எப்போது தான் கோபியை பற்றிய உண்மைகள் குடும்பத்தினர்களுக்கு தெரியவரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் தற்போது எழிலுக்கு உண்மைகள் அனைத்தும் தெரியவந்து கோபியை கண்டிப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.